வருதலானும், ‘‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே’’ என ஒருமையாகச் சுட்டப்பட்டிருத்தலானும் என்க. உரையாசிரியன்மார் இத்திரிபினை உம்மையானும் உத்தியானும் தழுவிக் கொண்டனர். |
சூ. 125 : | அத்தின் அகரம் அகரமுனை இல்லை |
(23) |
க-து : | அத்துச்சாரியை எய்தும் திரிபு கூறுகின்றது. |
பொருள்: அத்துச்சாரியையின்கண் உள்ள அகரம் அகர ஈற்றுச் சொல்லின்முன் குன்றும். ஆண்டு அகரத்தின் இசை புலப்படாமையான் ‘இல்லை’ என்றார். |
எ-டு: மக + அத்து + கை = மகத்துக்கை எனவரும். இனி, அத்துச்சாரியையன்றிப் பிறசொற்கள் வரினும் நிறுத்த சொல்லின் அகரஈறு, நாடாக + ஒன்றோ = நாடாகொன்றோ எனவும், ஒழிக + இனி = ஒழிகினி எனவும், உற்ற + உழி = உற்றுழி எனவும் கெடுதலின் நிலைமொழி அகரம் கெடுமென்றலே சால்புடைத்தென்பர் வேங்கடராசுலுரெட்டியார். இவை: ஆ, ஒழி, உறு என்னும் சொற்கள் ஆக, ஒழிக, உற்ற எனவிதி யீறாக நின்றனவன்றி மக என்பது போல இயல்பீற்றன அல்ல. ஆதலின் இவை புணர்ச்சி விகாரமெனப்படா. இத்தகையன செய்யுள் விகாரமாம் ஆதலின் அவர் கருத்துப் பொருந்தாமையறிக. |
சூ. 126 : | இக்கின் இகரமும் இகரமுனை அற்றே |
(24) |
க-து : | இக்குச் சாரியை திரியுமிடங்கூறுகின்றது. |
பொருள்: இக்குச்சாரியையின் இகரம் இகர ஈற்றுச்சொல் முன் அத்தின் அகரம் போல இல்லையாகும். |
எ-டு: ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக்கொண்டான் எனவரும். |
சூ. 127 : | ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் |
(25) |
க-து : | இதுவுமது. |
பொருள்: இக்குச் சாரியையின் இகரம் இகர ஈற்றுச்சொல் முன்னரேயன்றி ஐகார ஈற்றுச்சொல்முன்னரும் அவ்வியல் பெற்று நிற்கும். |
எ-டு: சித்திரை + இக்கு + கொண்டான் =சித்திரைக்குக் கொண்டான் எனவரும். திங்கள் முன்வரின் ‘இக்கேசாரியை’ |