நூன்மரபு165

எ-டு:புளியங்கோடு,    புளியஞ்செதிள்,   புளியந்தோல்   எனவரும்.
‘‘வரூஉம்காலை’’ என்பது ‘‘காலை’’ எனக் குறைந்து நின்றது.
 

‘தன்மெய்’ என்றதனான்  தம்,  நம்,  நும்  என்னும் சாரியைகளது மகர
ஒற்றுத்    திரிதலும்    கொள்க  என்பார். இவற்றைப் புள்ளிமயங்கியலுள்
ஆசிரியர் எடுத்தோதுதலான் ஈண்டு மிகைப்படுத்து   அடக்குதல் வேண்டா
என்க. திரிந்து எனப்பொதுப்படக்  கூறியிருப்பினும்   திரிபு     மூன்றனுள்
மெய்பிறிதாதலை ஏற்புழிக் கோடல் என்பதனாற் கொள்க.
 

சூ. 130 :

மென்மையும் இடைமையும் வரூஉங் காலை

இன்மை வேண்டும் என்மனார் புலவர்

(28)
 
க-து :

இதுவுமது.
 

பொருள்:மெல்லெழுத்தும்   இடையெழுத்தும்   முதலாகி வருமிடத்து
மேற்கூறிய அம்முச்சாரியையது மகரஒற்று இல்லையாதல்  வேண்டுமென்பார்
புலவர்.
 

எ-டு:புளியஞெரி,   புளியநுனி,   புளியமுரி  எனவும், புளியயாக்கை,
புளியவட்டு   எனவும்   வரும்.  (யாக்கை = கயிறு)  உரையிற்  கோடலாற்
புளியவிலை என உயிர்வருங்காற் கெடுதலும் கொள்க என்பார் உரையாளர்.
உயிர்வரின் புளியிலை-எனச் சாரியையின்றியமையும் என்க.புளிங்கறி என்பது
மரூஉ முடிபாகும்.
 

சூ. 131 :

இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு

இன்னென் சாரியை இன்மை வேண்டும்

(29)
 
க-து :

இன்சாரியை பற்றியதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :இன்    என்று  சொல்லப்பட்டு வரும் ஐந்தாம் வேற்றுமை
உருபிற்கு   முன்னர்,   இன்  என்னும்  சாரியை இல்லையாதல் வேண்டும்
என்று கூறுவர் புலவர்.
 

எ-டு:மலையின் வீழ்அருவி, ஊரின் நீங்கினான்  என  உருபு  நிற்கச்
சாரியை இல்லையாதல் கண்டு கொள்க.
 

பாம்பினிற்    கடிது   தேள்,   ‘கற்பினின்     வழா    நற்பலஉதவி’
‘அளவினிற்றிரியாது’   எனவருவனவற்றை இன்னோசைப் பயத்தவாய் வந்த
செய்யுள் முடிபாகக்கொண்டு புறனடையுள் அடக்குக.