இவ்விலக்கணத்தை அகத்தோத்தினுள் கூறின் நாற்பத்தெட்டு நூற்பாக்களான் கூறல் வேண்டும். இதனான் தொகைமரபின் இன்றியமையாமை தெளியப்படும். ஏனையவற்றையும் இவ்வாறே அறிந்து கொள்க. |
ஆசிரியர், ஞநமயவ என்றும் உயிர் என்றும் எடுத்துக் கூறியமையான் நுந்தை என்பதை வருமொழிக் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்டுதல் வேண்டாத ஒன்றாம். புணரியற் கொள்கையின்படி அது மெய்ம்முதலாக அடங்குமென்க. |
சூ. 145 : | அவற்றுள் |
| மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் |
| சொல்லிய தொடர்மொழி இறுதி யான |
(3) |
க-து : | வருமொழி மென்கணத்திற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் :மேற்கூறிய இயல்புகணம் மூன்றனுள், மெல்லெழுத்துக்களின் இயல்பு மேற்கூறியவாறன்றி,மொழிமரபினுட் சொல்லிய மூவகை மொழிகளுள் தொடர்மொழிகளின் இறுதிக்கண் உறழ்ந்துவரினும் நீக்கார் ஆசிரியர். |
எ-டு :வெதிர்ஞ்ஞெரி, வெதிர்ந்நுனி, வெதிர்ம்முறி எனவும் இதழ்ஞ்ஞெரி, இதழ்ந்நுனி, இதழ்ம்முறி எனவும் வரும். |
ஒருசார் யகர, ரகர, ழகர ஈற்றுச் சொற்களின் முன்னர் வன்கணம் உறழுமெனப் புள்ளிமயங்கியலுள் (சூ-65, 67, 88, 92) கூறப் பெற்றமையின், அவ்வாறே மெல்லெழுத்துக்களும் அவ்ஈறுகளின் முன்னர் உறழ்ந்து வருதல் உண்டென்று உணர்த்துவராய் வல்லெழுத்துறழ்ச்சி மூவகை மொழிக்கும் பொதுவாகி நிற்றலின் ஈண்டுத் தொடர்மொழிக்கண் வரும் என விதந்தோதினார். உம்மை எதிர்மறையாகலின் மிகாது வருதலே வலியுடைத்தாதலறிக. |
இனிக், கைம்மிகல், கைந்நீட்சி, மெய்ஞ்ஞானம், மெய்ந்நிலை என ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழிக்கண் மிக்கு வருதலை ‘‘ஈறியல் மருங்கின்’’ என்னும் இவ்வியலின் புறனடையாற் கொள்க. |
சூ. 146 : | ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் |
| வினையோ ரனைய என்மனார் புலவர் |
(4) |
க-து : | வருமொழி யகரத்திற்குரியதொரு தன்மை கூறுகின்றது. |