பொருள் :மேற்கூறிய அவ்விரு ஈறுகளும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், வருமொழி வன்கணமல்லாதவழி மேற்கூறிய இயல்பினவாம். வல்லெழுத்தாயின் திரியும் என்பது புள்ளிமயங்கியளுள் கூறப்படும். | எ-டு :மண், பொன் என நிறுத்தி - ஞெகிழ்ச்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை எனவும், அழகு, ஆக்கம், இயல்பு, ஈட்டம், உயர்ச்சி, ஊட்டம், எழுச்சி, ஏற்றம், ஐது, ஒடுக்கம், ஓக்கம் எனக்கூட்டி இயல்பாமாறு கண்டு கொள்க. | சூ. 149 : | லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் | | தந எனவரின் றனவா கும்மே | (7) | க-து : | லகர னகரங்களின் முன் தகர நகரங்கள் திரியுமென வருமொழித்திரிபு கூறுகின்றது. | பொருள் :லகர ஈறு னகர ஈறு எனவரும் புள்ளியீறுகளின் முன் தகரமுதல் நகர முதல் எனவரும் உயிர்மெய்கள்வரின் அவை முறையே றகர னகர உயிர்மெய்யாகத் திரியும். நிலைமொழித்திரிபு புள்ளிமயங்கியலுள் பெறப்படும். | எ-டு:கஃறீது, சொற்றிகழும், சொன்னன்று எனவும் பொன்றீது, பொன்னன்று எனவும் வரும். இவை அல்வழி. கற்றீமை, கன்னன்மை, பொற்றீமை, பொன்னன்மை எனவும் வரும். இவை வேற்றுமை. இவை பொருள் நோக்கானன்றி மயக்க விதியின்மையான் திரிந்தன என அறிக.இது வரும் சூத்திரத்திற்கும் ஒக்கும். | சூ. 150 : | ணளவென் புள்ளிமுன் டணஎனத் தோன்றும் | (8) | க-து : | ணகர ளகரங்களில் முன் தகர நகரங்களின் திரிபு கூறுகின்றது. | பொருள் :ணள என்று சொல்லப்பெறும் புள்ளிகளின் முன் தகரமும் நகரமும் என்னும் உயிர்மெய்வரின் அவை திரிந்து முறையே டகரமும் ணகரமுமாகத் தோன்றும். தகரநகரம் என்பது அதிகாரத்தான் வந்தது. | எ-டு:மண் + தீது =மண்டீது; மண் + நன்று =மண்ணன்று எனவும் முள் + தீது = முஃடீது; புள் + தேம்ப = புட்டேம்ப; முள் + நன்று = முண்ணன்று என அல்வழிக்கண்ணும் மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை,முண்ணன்மை என வேற்றுமைக்கண்ணும் வரும். |
|
|