ஆசிரியர் ‘பெயர்’ என விதந்து கூறுதலின் உயர்திணை வினைச் சொற்கள் இயல்பாயும் திரிந்தும் முடிவனவற்றை இம்மிகையாற் கொள்கவென நச்சினார்க்கினியர் கூறுவது ஏற்புடைத்தாகவில்லை. அவற்றைப் புறனடையாற் கொள்ளத் தகும். |
சூ. 154 : | அவற்றுள் |
| இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே |
(12) |
க-து: | இகரஈற்றுயர்திணைப் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் :மேற்கூறிய இருவகை ஈறுகளுள் இகரத்தானிற்ற உயர்திணைப்பெயர் திரியுமிட முடையதாகும். இடம் என்றது ஈண்டு வேற்றுமை வழியைக் குறிப்பாலுணர்த்தி நின்றது. |
எ-டு:நம்பிப்பேறு எனவரும். இடனுடைத்து என்றதனான் ஏனாதிப்பூ, காவிதிப்பூ எனச் சிறப்புப் பெயர்க்கண் மிகுதலும்,உரையிற்கோடல் என்னும் உத்தியான் நங்கைக்காடு, நங்கைப்பேறு என ஐகார ஈற்றுப்பெயர் மிகுதலும் கொள்க. நம்பிக்கொல்லன், செட்டிக்கூத்தன், நங்கைப்பெண் எனப் பண்புத் தொகைக்கண் மிகுதலைப் புறனடையாற் கொள்க. |
சூ. 155 : | அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே |
(13) |
க-து : | ஒருசார் விரவுப் பெயர்களின் தன்மை கூறுகின்றது. |
பொருள்:அஃறிணைப்பொருள் கருதிவரும் விரவுப்பெயர்கள் இயல்பாதலும் உளவாம். உம்மையான் திரிந்து வருதலும் உளவெனக் கொள்க. |
ஒவ்வொரு திணையுள்ளும் பால்பற்றியும் எண்ணுப்பற்றியும் விரவுப் பெயர்கள் உளவாதலின் அஃறிணைப்பொருட்டாய் வரும் விரவுப் பெயர் என்பது விளங்க “அஃறிணை விரவுப் பெயர்’’ என்றார். இனிச் சாத்தன், சாத்தி, கோதை; தாய், தந்தை; மகன், மகள் என இயற்பெயர் முதலாக முறைப்பெயரீறாக வரும் விரவுப் பெயர்களுள் அகத்தோத்தினுள் விதந்து கூறப்பெற்றவை ஒழிந்த ஏனையவற்றை ஈண்டுக் கொள்க. |
எ-டு:சாத்தன், சாத்தி, தந்தை என நிறுத்தி; கண்டது,சென்றது, தக்கது, பார்த்தது என அல்வழிக்கண்ணும் கை, செவி, தலை, புறம் என வேற்றுமைக்கண்ணும் இயல்பாதல் கண்டுகொள்க. உம்மையான் சாத்திப்புல், கொற்றிக்கோடு என வேற்றுமைக்கண் மிக்குவருதல் கொள்க. |