இவற்றுக்கு உம்மை விரித்துப் பொருள் கொள்க. கலவரை, செவிட்டரை என்பவற்றின் நிலைமொழித் திரிபை ஈண்டுப் ‘‘புரைவதன்று’’ என்பதனை மிகையாக்கி அதனான் முடிப்பார் உரையாளர். அவை (புள்ளிமய-24, குற்றுகரப்புண-20) அகத்தோத்தின் விதிப்படி முடிவனவாகலின் ஈண்டு அடக்குதல் வேண்டா என்க. |
சூ. 166 : | குறையென் கிளவி முன்வரு காலை |
| நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை |
(24) |
க-து : | குறை என்னும் சொல்வரின் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் :குறை என்னும் அளவுப் பெயர் மேற்கூறிய அளவைப் பெயர்களின்முன் வருமிடத்து, வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறிய இலக்கணத்தைப் பெற்றுச் சாரியை இல்லாத குறை தோன்றாமல் நிறைவு பெறத் தோன்றும். |
எ-டு:உரிக்குறை, தொடிக்குறை, காணிக்குறை, கொட்குறை, காற்குறை எனவரும். இவற்றையும் உம்மை விரித்துக் கொள்க. குறை என்பதன் பொருட்டாய் வரும் கூறு என்பதற்கும் இவ்விதி ஒக்கும். உரிக்கூறு எனவரும். |
சூ. 167 : | குற்றிய லுகரக்கு இன்னே சாரியை |
(25) |
க-து: | குற்றியலுகர ஈற்று அளவைப் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் :குற்றியலுகர ஈற்று அளவைப் பெயர்களின்முன் குறை என்பது புணருமிடத்து ‘இன்’ சாரியை பெறும். |
எ-டு:உழக்கின்குறை, ஆழாக்கின்குறை, கஃசின்குறை, கழஞ்சின்குறை, ஒன்றின்குறை, பத்தின்குறை எனவும் உழக்கின்கூறு,ஆழாக்கின்கூறு எனவும் வரும். (உழக்கின்குறை = உழக்கும் குறையும் என்பது பொருள்) குற்றியலுகரக்கு என்பது செய்யுள் விகாரம். ஏகாரம் இசைநிறை. |
சூ. 168 : | அத்திடை வரூஉம் கலமென் அளவே |
(26) |
க-து : | கலம் என்னும் அளவுப் பெயருக்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் :கலமென்னும் அளவுப் பெயர் குறை என்னும் சொல்லொடு புணருங்கால் அத்துச் சாரியை இடையே வரும். |
எ-டு:கலத்துக்குறை. (கலமும் குறையும் என்பது பொருள்) |