சூ. 171: | ஈறியல் மருங்கின் இவை இவற் றியல்பெனக் |
| கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் |
| மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி |
| ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே |
(29) |
க-து: | மூவகை ஈறுகளும் நின்று புணரும் புணர்நிலை இலக்கணம் பற்றிப் புறனடை கூறுகின்றது. |
பொருள் :உயிரும் புள்ளியும் குற்றியலுகரமும் நின்று வருமொழியொடு கூடி நடக்குமிடத்து, இவற்றின் புணர்நிலை இயல்பு இவை எனக் கூறிய சொற்களின் பலவாறான நெறிகள் எல்லாம், அவற்றின் பொருண்மை சார்ந்த வழக்கொடு பொருந்திப் புணரும் நிலைமைக்கண் பிறவாறு ஒத்தவை எல்லாம் உரியவாம். |
என்றது: கூறப்பெறாதுநின்ற இலக்கணத்தான் சான்றோர் வழக்காய்ப் புணர்ந்து நடக்கும் இயல்பெல்லாம் அறிந்து மொழியியலுக்கு மாறுபடாதவற்றை எல்லாம் புணரியல் நெறியாகக் கொள்க என்றவாறு. |
அவற்றுள் சில வருமாறு : |
துக்கொற்றா, நொக்கொற்றா, துந்நாகா, துவ்வளவா என ஓரெழுத் தொருமொழிக்கண் மூவினமும் மிக்குவருதலும் கைம்மிகல்,மெய்ந்நிலை என ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொரு மொழிகளின் கண் மெல்லெழுத்து மிக்கு வருதலும் உண்டு, வருது, உண்டீர்,உண்ப என்னும் வினைச் சொற்கள் இயல்பாகப் புணர்தலும், ஐகார ஈற்று வினைச்சொல் ஒல்லைக் கொண்டான் - என மிக்குவருதலும் மண்ணுகொற்றா - மண்ணுக்கொற்றா என முதனிலைஏவல் உகரம் பெற்று வன்கணத்தொடு உறழ்ந்து வருதலும், சாண்கோல் என்பது சாட்கோல் என அல்வழிக்கண் திரிந்து வருதலும் நம்பிக் கொல்லன், செட்டிக் கூத்தன், நங்கைப் பெண் எனப் பண்புத்தொகைகள் அல்வழியுள் உயர்திணைப் பெயர்க்கண் மிக்குவருதலும் பிறவுமாம். |
சூ. 172: | பலரறி சொன்முன் யாவர் என்னும் |
| பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை |
| ஒன்றறி சொல்முன் யாதுஎன் வினாவிடை |
| ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் |
| மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே |
(30) |
க-து : | சில சொற்கள் திரிந்து மரூஉ முடிபாகி நிற்குமாறு கூறுகின்றது. |