பொருள்:சுட்டெழுத்தினை முதலாக உடைய ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதி, உருபு வருங்கால் வற்றென்னும் சாரியையொடும் பொருந்தி நிற்றற்கு உரித்தாகும். |
எ-டு:அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவரும். பிற உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. வற்றினது வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது. வகரமெய் கெட்டவிடத்து யகரம் உடம்படு மெய்யாக வந்தது. |
‘நிற்றலும்’ என்னும் உம்மையை வற்றொடும் எனக் கூட்டுக. அதனான் பிறவற்றொடும் நிற்றற்குரித்தெனக் கொள்க. எ-டு: அவைதம்மை, அவைதம்மொடு எனத் தம்முச்சாரியையொடு வரும். சிறுபான்மை வற்றொடு இன் சாரியை ஒருங்கு பெறுதலும் கொள்க. எ-டு: அவையற்றிற்கு எனவரும். |
சூ. 178 : | யாவென் வினாவின் ஐயென் இறுதியும் |
| ஆயியல் திரியாது என்மனார் புலவர் |
| ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே |
(6) |
க-து : | யாவை என்னும் வினாப் பெயருக்கு அவ்விதியை மாட்டேற்றி அதனொடு நிலைமொழித் திரிபும் கூறுகின்றது. |
பொருள் :யா என்னும் வினாவை முதலாக உடைய யாவை என்னும் சொல்லின் ஐகார இறுதியும் மேற்கூறிய இலக்கணத்திற்றிரியாது எனக் கூறுவர் புலவர். அவ்வழி நிலைமொழி வகரமெய் ஐகாரத்தொடு ஒருங்குகெடும். |
எ-டு:யாவற்றை, யாவற்றொடு எனவும் யாவற்றிற்கு எனவும் வரும். பிற உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. |
சூ. 179 : | நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் |
| ஆவயின் னகரம் ஒற்றா கும்மே |
(7) |
க-து : | நீயென்னும் ஓரெழுத்தொருமொழியொடு உருபு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :நீ என்னும் ஓரெழுத்துப் பெயராகிய நெட்டெழுத்துத் தனது மாத்திரை குறுகி நிற்கும். அவ்விடத்து ஒரு னகரப் புள்ளி தோன்றி நிற்கும். |
மொழிக்கு அடிப்படையாகலின் எழுத்தினை முதல் என்றார். நீ என்னும் முதனிலைத் தொழிலை நீக்க ஒருபெயர் என்றார்.ஆகும் என்பது தோன்றும் என்னும் பொருட்டாய் நின்றது. |