நூன்மரபு210

பொருள் :அழன்  புழன்  என்னும்  அவ்இரண்டு  மொழிக்கும் உருபு
வருங்கால் அத்துச்சாரியையும்  இன்சாரியையும் உறழ்ந்து தோன்றுதல் மரபு
என்பார் அச்சொற்களின் நிலையை உணர்வோர்.
 

இவை  மகர  ஈற்றுச்  சொல்லாகத்  தோன்றி  னகர  ஈறாகத்  திரிந்து
வழங்குவன   என்பதை  உணர்த்த   ‘உணருமோர்’   என்றார்.  ‘ஒத்தது’
என்பதனை  “ஒத்தறிவான்  உயிர் வாழ்வான்” (குறள்-214) என்பது போலக்
கொள்க.
 

எ.டு :அழத்தை,  அழனினை  எனவும்  புழத்தை, புழனினை எனவும்
வரும்.   ஏனைய   உருபுகளொடும்   ஒட்டிக்கொள்க.   அத்தே   வற்றே
(புணரியல்-31) என்பதனான்  நிலை  மொழியீறும்  அத்தினகரம் (புணரி-23)
என்பதனான்,   அத்தின்   அகரமும்   கெட்டன   என்க.    இன்னினும்
அத்துவருதல்-ஒத்ததாகலின் அதனை முற்கூறினார்.
 

சூ. 194 :

அன்என் சாரியை ஏழன் இறுதி

முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப
(22)
 

க - து :

ஏழ் என்னும் சொல் உருபொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஏழ்  என்னும்  எண்ணுப் பெயரிறுதிமுன் உருபு வருங்கால்
அன்  என்னும்  சாரியை  தோன்றுதல் இலக்கணமுடையது என்று கூறுவர்
புலவர்.
 

எ. டு :ஏழனை, ஏழனொடு, ஏழற்கு  எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக்
கொள்க.
 

சூ. 195 :

குற்றிய லுகரத் திறுதி முன்னர்

முற்றத் தோன்றும் இன்னென் சாரியை
(23)
 

க - து :

குற்றுகர ஈறுகள் உருபொடுபுணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :குற்றியலுகரமாகிய   இறுதியின்முன்  உருபு வருங்கால் இன்
சாரியை முழுமையாகத் தோன்றும்.
 

எ. டு :நாகினை,  நாகினொடு;  வரகினை,   வரகினொடு;  எஃகினை,
எஃகினொடு; பாக்கினை, பாக்கினொடு; கன்றினை, கன்றினொடு; தெள்கினை,
தெள்கினொடு எனவரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க.
 

சூ. 196 :

நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்

அப்பால் மொழிகள் அல்வழி யான
(24)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.