பொருள் : குற்றியலுகர இறுதி முன்னர் இன்சாரியை தோன்றுவது நெட்டெழுத்துத்தொடர்க் குற்றியலுகரத்தின்பின் ஒற்றுமிகும். (குற்-புண-6) ஒருசார் மொழிகள் அல்லாத ஏனைய சொற்களிடத்தேயாம். |
ஒற்றுமிகத் தோன்றும் எழுத்துக்களாவன டகரமும் றகரமுமாம். அவை இயல்பாக வரும் என மேற்கூறுப. அப்பால் மொழிகள் எனப்பன்மை கூறியவதனான் டகர றகரங்களும் சிறுபான்மை தகரமும் தொடர்ந்த உயிர்த்தொடர் மொழிகளுள் சிலவும் இயல்பாக வருமெனக் கொள்க. எடுத்துக்காட்டு அந்நூற்பாவுரையுள் கண்டு கொள்க. |
சூ. 197 : | அவைதாம் |
| இயற்கைய வாகும் செயற்கைய என்ப |
(25) |
க-து: | ஒற்றுமிகத் தோன்றும் குற்றியலுகர மொழிகள் உருபொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: மேலே ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிகள் எனப்பட்டவைதாம், இயல்பாகப் புணரும் இலக்கணத்தை உடையன என்று கூறுவர் புலவர். இயற்கை = இலக்கணம்; செயற்கை = செய்கை-செயற்பாடு. |
எ. டு: யாட்டை, (யாடு + ஐ = யாட்டை) யாட்டொடு, சோற்றை-சோற்றொடு; (முருடு) முருட்டை, முருட்டொடு; (முயிறு) முயிற்றை, முயிற்றொடு; (எருது) எருத்தை, எருத்தொடு எனவும் வரும். |
‘‘செயற்கைய’’ என்ற மிகையான் யாட்டிற்கு, சோற்றிற்கு, யாட்டின்கண், சோற்றின்கண் எனச் சாரியை பெற்றுவருதலும் கொள்க. |
சூ. 198 : | எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் |
(26) |
க-து: | குற்றுகர ஈற்று எண்ணுப் பெயர்கள் உருபொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: எண்ணுப் பெயராக வரும் குற்றுகர ஈறுகள் உருபொடு புணருங்கால் அன்சாரியையொடு பொருந்தி வரும். |
எ. டு: ஒன்றனை, இரண்டனை, மூன்றனை, நான்கனை, ஐந்தனை, ஆறனை, எட்டனை, ஒன்பஃதனை, பஃதனை, நூறனை எனவரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டுக. |