நூன்மரபு213

பொருள : யாது       என்னும்       வினாப்பெயரின்    இறுதியும்,
சுட்டெழுத்துக்களை முதலாக உடைய ஆய்தத் தொடர்  மொழிக்  குற்றுகர
இறுதியும் அன்  சாரியையொடு  பொருந்தும்; அவ்வழிச் சுட்டுப்  பெயரின்
இடைநின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும்.
 

ஆய்தத்   ‘தொடர்மொழி’   இறுதி  என்பதும்  கெடுதல்  ‘வேண்டும்’
என்பதும் குறைந்து நின்றன.
 

எ. டு : யாதனை, £தனொடு  எனவும், அதனை, அதனொடு; இதனை,
இதனொடு;  உதனை,  உதனொடு  எனவும் வரும்.  ஏனைய  உருபொடும்
கூட்டிக் கொள்க.
 

சூ. 201 :

ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் 

சாரியைக் கிளவி இயற்கையு மாகும் 

ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே

(29)
 
க-து :திசைப்   பெயர்கள் ஏழனுருபொடு    புணருங்கால்   எய்தும்
முறைமை கூறுகின்றது.
 

பொருள்: திசைப்   பெயரின்   முன்வரும்  ஏழனுருபிற்கு மேற்கூறிய
இன்சாரியை வாராமல்  இயல்பாயும்  புணர்தலாகும்.   அவ்வழித்  திசைப்
பெயரின் இறுதி நின்ற குற்றியலுகரம் தான்  ஊர்ந்து  நின்ற  மெய்யொடும்
கெடும்.
 

‘ஆவயின்’ என்றது சாரியை வாராமல் இயற்கையாயவிடத்து என்றவாறு.
 

எ.டு: வடக்கண்,   தெற்கண்,    கிழக்கண்,    குடக்கண்   எனவரும்.
குணக்கண்,  மேற்கண்  எனலும்   ஆம்.   உம்மை   எதிர்மறையாகலான்,
வடக்கின்கண், கிழக்கின்கண் எனவருதலே பெரும்பான்மை என்று கொள்க.
 

சூ. 202 :

புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் 

சொல்லிய வல்ல ஏனைய வெல்லாம் 

தேருங் காலை உருபொடு சிவணிச் 

சாரியை நிலையுங் கடப்பா டிலவே 

(30)
 

க-து:

உருபு புணரியலுக்காவதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள : புள்ளியீற்றுச்    சொற்களும்   உயிரீற்றுச்   சொற்களுமாக
மேற்கூறப்பட்டனவும் கூறப்படாதனவுமாகிய எல்லாம்