நூன்மரபு216

மிகுவது    ஒலி     என்பது    விளங்க   ‘ஒற்றிடைமிகுமே’   என்றார்.
இவ்வதிகாரம்   முடியக்கூறும்     மிகுதல்,     மெய்பிறிதாதல்,   குன்றல்
என்பவை  ஒலிஎழுத்தைப்   பற்றியவையே   என்பதும்   வரிவடிவின்கண்
அவ்வேறுபாடு   தோன்ற   எழுதிக்   கொள்ளப்பெறும்  என்பதும் மேல்
உணர்த்தப் பெற்றன.
 

எ. டு : விளக்குறிது,   சிறிது,     தீது,       பெரிது     எனவரும்.
 

இடைச்சொல்லும் உரிச்சொல்லும்  பெயர்ப்பொருட்டாயும்  பெயர்களைச்
சார்ந்தும்   வருமிடத்து   அவை   பெயராகக்  கொள்ளப்படும்  என்பார்
பெயர்என்னாது பெயர்நிலைக்கிளவி  என்றார்.  அந்நெறியானே  தடக்கை,
வயக்களிறு என உரிச்சொற்கள் பெயர்நிலைக் கிளவியாய் நின்றுபுணர்ந்தன.
மெலிமிகுந்த  கமஞ்சூல்,   தடஞ்செவி  என்பன   ஓசைகருதிய  செய்யுள்
விகாரமாம்.  அன்றிப்  புறனடையாற்  கொள்ளலுமாம்.  இனி, வரிவடிவைச்
சுட்டிக்  கூறுமிடத்து  அ+குறிது=அக்குறிது,  அப்பெரிது   எனத்  தன்னை
உணர்த்தி நின்ற வழிப் பெயர்நிலைமை எய்திற்றாகலின் எழுத்தும் இவ்விதி
பெற்றதென்க. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.
 

சூ. 204 :

வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் 

எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் 

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் 

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே

(2)
 

க-து

அகர ஈற்றுள்  ஒருசார்   வினைச்சொல்லும்   இடைச்சொல்லும்
வன்கணத்தொடு   புணருமாறு   கூறுகின்றது.  இடைச்சொற்கள்
தத்தம் பொருளவாயும், பெயர்வினைகளைச் சார்ந்தும்   பெயரும்
தொழிலுமாக ஆக்கமுற்று   நின்று புணரும் என்பது இதனானும்
பெறப்படும்.
  

பொருள் : அகர  ஈற்று   வினையெச்சச் சொல்லும், அகர ஈற்று உவம
உருபிடைச்  சொல்லும்,  என  என்னும்   சொல்லும்,  அகரச்  சுட்டாகிய
இறுதியும், ஆங்க என்னும்  உரையசைக்  கிளவியும்  நின்று  புணருங்கால்
கசதபக்கள் வரின் மிகும்.
 

எ. டு:  உணக்கொண்டான்,    சென்றான்,   தந்தான்,   போயினான்
எனவும்,    தவக்கொண்டான்,   தவப்பெரியன்    எனவும்   புலிபோலப்
பாய்ந்தான் எனவும் சொல்லெனச்  சொன்னான்   எனவும்   அக்கொற்றன்
எனவும்    ஆங்கக்     கொண்டான்   எனவும்   வரும்.   பொருந்தும்
சொற்கொணர்ந்து   ஏனைய   எழுத்துக்களொடும்  ஒட்டிக்கண்டு கொள்க.
‘‘சுட்டின் இறுதி’’ என்பதன்கண் ‘‘இன்’’ உயிர்வழி வந்த சாரியையாம்.