சூ. 205 : | சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் |
| ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும் |
(3) |
க - து : | அகரச்சுட்டு மெல்லெழுத்துக்களொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : அகர ஈறாகிய சுட்டுச்சொல்லின் முன் ஞநம என்பவை மொழிமுதலாகவரின், வந்த அம்மெல்லின ஒற்று இடையே மிகும். |
எ. டு: அஞ்ஞாண், அந்நூல், அம்மலர் எனவரும். வரிவடிவைச் சுட்டி நின்றவழி அஞ்ஞெளிர்த்தது, நீண்டது, மெலிந்தது எனவரும். |
சூ. 206 : | யவமுன் வரினே வகரம் ஒற்றும் |
(4) |
க - து: | அகரச்சுட்டு இடையெழுத்துக்களொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய சுட்டுச்சொல்லின் முன் யகர வகரங்கள் வரின் இடையே வகர ஒற்றுத்தோன்றும். |
எ. டு: அவ்யாழ், அவ்வளை எனவரும். வரிவடிவைச் சுட்டி அவ்யாது, அவ்வளைந்தது எனவரும். |
சூ. 207 : | உயிர் முன்வரினும் ஆயியல் திரியாது |
(5) |
க - து : | அகரச்சுட்டு உயிர் முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : அகரச்சுட்டின் முன் யகர வகரமேயன்றி உயிர் முதன் மொழிவரினும் மேற்கூறியாங்கு வகரஒற்று இடையே தோன்றுதலாகிய இலக்கணம் திரிபடையாது. வகரம் ஒற்றிய வழி அது குறிற்கீழ் ஒற்றாய் நிற்றலின் இரட்டுமென அறிக. |
எ. டு : அவ்வணி, அவ்வாடை, அவ்விலை எனவரும். பிறவும் அன்ன வரிவடிவைச் சுட்டி அவ்வழகிது எனவரும். |
சூ. 208: | நீட வருதல் செய்யுளுள் உரித்தே |
(6) |
க - து : | அதன் முன் உயிர் வருவழிச் செய்யுள் வழக்கிற்குரிய விதி கூறுகின்றது. |
பொருள் : உயிர் முதன்மொழியாகி வருமிடத்து அகரச்சுட்டு நீண்டு வருதல் செய்யுள் வழக்கிற்குரியதாகும். |
எ. டு: ஆயிருதிணை - ஆயிருபாற் சொல் எனவரும். |
‘‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’’ (எச்ச-61) என்பதனான் ‘நீண்டு’ என்னும் செய்தெனெச்சம் திரிந்து |