நூன்மரபு225

அற்றாயின்,    ‘‘பலவற்றிறுதி    உருபியல்    நிலையும்’’,  ‘‘சுட்டுமுத
லிறுதி  உருபியல்  நிலையும்’’  என்னுமிடங்களில்  அதிகார  வல்லெழுத்து
மிக்க தன்றோ எனின்?  அன்று.  அவை,  “அத்தே  வற்றே”  (புணரி-31)
என்னும்  சூத்திரத்து  “அவற்றுமுன்   வரூஉம்   வல்லெழுத்து  மிகுமே’’
எனச்சாரியைக்கு  ஓதிய  விதிப்படி  மிக்கன  என்க.  சாரியை  பெற்றவழி
அதிகார வல்லெழுத்துக் கெடாது என்பது  ஆசிரியர்  கருத்தாயின்  ‘‘ஆடூ
மகடூ ஆயிரு பெயர்க்கும், இன்னிடை வரினும் மான  மில்லை’’  (உயிர்-69)
‘‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’’  (உயிர்-77) ஏழென்கிளவி உருபியல்
நிலையும் (புள்ளி-93)  எனவருமிடத்தெல்லாம்  வல்லெழுத்தியல்பாகும் என
ஓதியிருப்பார் என்க.
 

சூ. 219 :

அத்தவண் வரினும் வரைநிலை யின்றே
(17)
 

க - து:

மகவென்னும் சொற்கு அத்துச் சாரியையும் வருமென்கின்றது.
 

பொருள்: மகவென்னும்    சொல்லிடத்து    இன்சாரியையே   யன்றி
அத்துச்சாரியை வரினும் நீக்கும் நிலைமையின்று.
 

எ.டு: மகத்துக்கை,   செவி,      தலை,       புறம்     எனவரும்.
 

‘அவண்’ என்பதனான் மகப்பால்யாடு   என   வல்லெழுத்து மிகுதலும்
கொள்க    என்பார்    நச்சினார்க்கினியர்.     சாரியை    பெறாதவழிப்
பொது விதியான்  வல்யெழுத்துமிகுதல்  கூறாமலே  அமையுமென்க.  ‘நிலை’
என்றதனான்  மகம்பால்யாடு  என  மெல்லெழுத்துப்  பெறுதலும்  கொள்க
என்பார் அவர். அதனைச் செய்யுள் விகாரமாகக் கோடலே நேரிதென்க.
 

சூ. 220 :

பலவற் றிறுதி உருபியல் நிலையும்
(18)
 

க - து:

அகர  ஈற்றுப்   பலவறி   சொற்காவதொருவிதி   கூறுகின்றது
 

பொருள் : பலவறி  சொற்களின்கண்   வரும்   அகரஇறுதி  உருபொடு
புணரும்  இலக்கணத்தை  ஒத்து  நிலைபெறும்   என்றது;  வற்றுச்சாரியை
பெற்றுப்புணரும் என்றவாறு.
 

எ டு : பலவற்றுக்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.  பல்ல,  சில்ல,
சில    என்பவற்றொடும்    நல்லன,    கரியன,     உண்டன   என்னும்
வினையாலணையும் பெயர்களொடும் ஏற்பன கூட்டிக் கண்டு கொள்க.
 

சூ. 221 :

ஆகார இறுதி அகர இயற்றே
(19)
 

க - து:

ஆகார   ஈற்றுச்   சொற்கள்     அல்வழிக்கண்   புணருமாறு
கூறுகின்றது.