பொருள்: ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாய்ப் புணரும் என்றது; கசதபக்கள் வரின் மிகும் என்றவாறு. |
எ. டு: தாராக் கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். |
சூ. 222 : | செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் |
| அவ்வியல் திரியா தென்மனார் புலவர் |
(20) |
க - து: | ஆகார ஈற்று வினையெச்சச்சொல் ஒன்று மேற்கூறிய விதி பெறும் என்கின்றது. |
பொருள்: ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சச் சொல்லும் மேற்கூறிய ஆகார ஈற்றுப்பெயர் போலக் கசதபக்கள் வரின் மிக்குமுடியும் என்று கூறுவர் புலவர். |
எ. டு: உண்ணாக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். உண்டு கொண்டான் என்பது பொருள். இச்சூத்திரத்தாற் ‘‘செய்யா’’ என்னும் வினையெச்ச வாய்பாடு ஒன்று உண்டு என்பதை உடம்பொடு புணர்த்தலான் கொள்ள வைத்தார். |
இனி, உரையிற் கோடல் என்னும் உத்தியான் அறியாப் பொருள்வயின் எனவும் வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் எனவும் உண்ணாக் கொற்றன், வாராக் கொற்றன் எனவும் எதிர்மறைப் பெயரெச்சம் ஈறுகெட்டு மிக்கு வருதலை அடக்கிக் கொள்க. |
சூ. 223 : | உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி |
| மெய்ம்மை யாக அகரம் மிகுமே |
(21) |
க - து: | உம்மைத்தொகை மொழி ஒன்றற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : ஆகார ஈறாய் நின்று உம்மைப் பொருள்படத் தொக்குப் புணரும் இருசொற்றொகை மொழிகளின் இடையே பொருண்மை உடையதாக ஓர் அகரம் தோன்றி முடியும். |
பொருண்மையாவது தொக்குநின்ற உம்மையினது பொருளாம். மிகும் என்றது தோன்றும் என்னும் பொருட்டாய் நின்றது. |
எ. டு: உவாஅப்பதினான்கு, இரா அப்பகல் எனவரும். |
இவற்றின்கண் அகரம் தோன்றாதாயின் பதினான்கு உவாக்கள் என்றும் இரவானது பகல், இல்லாதபகல் என்றும் கவர்பொருள் படுமென்க. |