நூன்மரபு227

நிலைமொழிச்   செய்தியாகத்   தோன்றிய   அகரம்,   விதியீறாக  நிற்கப்
பொதுவிதியான் வல்லெழுத்துமிக்கதென்றறிக.
 

இனி  ‘‘மெய்ம்மையாக’’   என்னும்   விதப்பான்,   ஏனைய   தொகை
மொழிகளுள்   அராஅப்பாம்பு   என்னும்   இருபெயரொட்டுப்   பண்புத்
தொகைக்கண்ணும்,  அராஅக்குட்டி   என்னும்   வேற்றுமைத்   தொகைக்
கண்ணும்   இராஅக்கொடிது   என்னும்   எழுவாய்த்   தொடர்க்கண்ணும்
இராஅக்காக்கை   என்னும்   ஈறுகெட்ட   எதிர்மறைப்   பெயரெச்சத்தின்
கண்ணும்   இறாஅவழுதுணங்காய்   என  இயல்புகணம்  வருதற்கண்ணும்
சிறுபான்மை அகரந்தோன்றுதல் கொள்க.
 

பண்புத்தொகையும்  வினைத்தொகையுமே   பிரித்துப்   புணர்க்கப்படா
என்பது விதியாகலின், ஏனைத்தொகைகளைப் பிரித்துணருமாறு  கூறுவாராய்
ஈண்டு உம்மைத்தொகை புணர்ந்து நிற்கும் மரபு கூறினார் என அறிக.
 

சூ. 224 :

ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் 

யாவென் வினாவும் பலவற் றிறுதியும் 

ஏவல் குறித்த உரையசை மியாவும் 

தன்றொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு 

அன்றி யனைத்தும் இயல்பென மொழிப

(22)
 

க - து:

ஆகார   ஈற்றுச்   சொற்களுள்   இயல்பாக  முடிவனவற்றைத்
தொகுத்துரைக்கின்றது.
 

பொருள்: ஆ, மா என்னும்   பெயர்களும்   ஆகார ஈற்று விளியாக
வரும்  பெயர்ச் சொல்லும், யா  என்னும்  வினாப் பெயரும், ஆகார ஈற்று
எதிர்மறை   வினைமுற்றுச்     சொல்லும்,     அவ்வினைப்    பெயரும்,
ஏவற்பொருண்மை  குறித்த  சொல்லின்கண்  உரையசையாக  வரும்  மியா
என்னும்  இடைச்சொல்லும்,  தன்மை   இடம்பற்றி  வரும்  ஆகார  ஈற்று
வினாவினைச் சொல்லும் ஆகிய அவ்அனைத்துச்  சொற்களும்  கசதபக்கள்
வரின் இயல்பாகப் புணரும் என்று கூறுவர் புலவர்.
 

எ. டு: ஆகுறிது; மாகுறிது, சிறிது, தீது,  பெரிது  எனவும்  ஊராகேள்;
கொற்றாகேள்,  செல்,  தா,   போ    எனவும்   யாகுறிய,    சிறிய, தீய,
பெரிய எனவும்   உண்ணாகுதிரைகள்,   தகர்கள்,  செந்நாய்கள்,  புலிகள்
எனவும் உண்ணாகிடந்தன, சென்றன, தங்கின, போயின எனவும் கேண்மியா
கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்  உண்காகொற்றா,  சாத்தா,  தேவா, பூதா எனவும் வரும்.