சூ. 236: | இனியணி என்னும் காலையும் இடனும் |
| வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன |
(34) |
க - து: | சில இகர ஈற்றுச் சொற்கள் அல்வழிக்கண் முன்னர் வேற்றுமைக்கு ஓதிய முடிவு பெற்று வருமென்கின்றது. வினையெஞ்சு கிளவியை உடன் கூறினமையான் இஃது அல்வழி முடிபென்பது பெறப்படும். |
பொருள்: இனி-அணி என்று சொல்லப்படும் காலத்தையும் இடத்தையும் முறையே உணர்த்தும் சொற்களும், இகரஈற்று வினையெச்சச் சொல்லும் இகரமாகிய சுட்டிடைச் சொல்லும் மேற்கூறிய அத்தன்மையனவாம். அஃதாவது வல்லெழுத்து மிகுமென்றவாறு. |
எ. டு: இனிக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும், அணிக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும், தேடிக்கண்டான், சென்றான், தந்தான், பார்த்தான் எனவும் இக்கூத்தன், சாத்தன், திண்ணன், பாணன் எனவும் வரும். |
இச்சூத்திரத்துள் வினை ஒழிந்த இடைச்சொல் மூன்றும் உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதலின், வேறோதி முடித்தார் என்பார் நச்சினார்க்கினியர். அல்வழியும் வேற்றுமையும் ஒரு சூத்திரத்துள் ஒருங்கு விதித்தல் இலக்கண மரபு அன்றென்பது மேலே விளக்கப்பட்டது. |
இச்சூத்திரத்தான் அனி, உனி, இணி, உணி என்னும் சொற்கள் ‘இனி அணி’ என்பவற்றின் இனமாக வழங்கியிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது. |
சூ. 237 : | இன்றி என்னும் வினையெஞ் சிறுதி |
| நின்ற இகரம் உகர மாதல் |
| தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே |
(35) |
க - து: | இன்றி என்னும் வினையெச்சத்திற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : இன்றி எனப்படும் வினையெச்சத்தின் இறுதிநின்ற இகரம் உகரமாகத் திரிந்து வருதல் தொன்மையான இலக்கணப் பாங்கினான் செய்யுளுள் உரித்தாகும். |
திரிந்தவழி விதியீறாய்க் குற்றியலுகரமாக நிற்றலின் அவ்வீற்று விதிக்கொப்ப வல்லெழுத்துவரின் இயல்பாகப் புணருமென்க. (குற்-புண-20) |