நூன்மரபு235

எ. டு: உப்பின்றுபுற்கை  உண்கமா  கொற்கையோனே  (இளம்பூரணம்
மேற்கோள்-238) எனவரும்.  தன்னினம்  முடித்தல்  என்னும்  உத்தியான்,
அன்றி என்னும் வினை எச்சச் சொல்லிற்கும் இவ்விதி கொள்க.
 

எ. டு: வாளன்று   பிடியா   வன்கண்   ஆடவர்   (புறநானூறு-124.)
எனவரும்.  ‘‘தொன்றியல் மருங்கின்’’ என்றதனான் இவ்விதி உலக வழக்கிற்
கெய்தாதென்க.
 

சூ. 238 :

சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே

(36)
 
க - து:

மேலே   இனியணி   என்னும்   சூத்திரத்து  வல்லெழுத்தொடு
புணருமாறு  கூறினமையின்  ஈண்டு   முற்கிளந்தற்று   என்றது
‘‘சுட்டின்  முன்னர்  ஞநமத்   தோன்றின்’’   என்பது  முதலாக
அகரச்சுட்டிற்கு (சூ. 205,   206, 207, 208)   ஓதியவற்றை  என
உணர்க.
 

பொருள்: இகர எழுத்தாகிய  சுட்டிடைச்சொல்   புணருமியல்பு  மேல்
இயல்புகணத்தொடு  புணரும்  அகரச்சுட்டிற்கு   ஓதிய   தன்மைத்தேயாம்
என்றது. மெல்யெழுத்துவரின் மிகுதலும் இடை   எழுத்தும்   உயிரெழுத்தும்
வரின் வகர ஒற்றுத் தோன்றுதலும் செய்யுட்கண் மாத்திரை நீண்டிசைத்தலும்
இதற்கும் ஒக்கும் என்றவாறு.
 

எ.டு: இஞ்ஞான்று,    இந்நூல்,    இம்மலர்    எனவும்    இவ்யாழ்,
இவ்விரல்,   இவ்வணி,   இவ்வாடை எனவும் ஈவயினான-ஈயிடை நின்றான்
எனவும் வரும். “ஈகாண்டோன்றும்” என்பது ஈன் என்னும் சுட்டுப் பெயரின்
ஈற்றழிவாகும். அதனைப் புறனடையாற் கொள்க. (ஈன்-இவ்விடம்)
 

சூ. 239 :

பதக்கு முன்வரினே தூணிக் கிளவி 

முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே 

(37)
 

க - து:

இகர  ஈற்று   அளவைப்   பெயர் ஒன்றற்கு எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி கூறுகின்றது.
 

பொருள் : தூணி என்னும் சொல், தனக்கு முன்னர்ப்  பதக்கு என்னும்
சொல்வரின்,   முன்னர்    வேற்றுமைப்   புணர்ச்சிக்குக்   கிளந்தோதிய
இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு  முடியும். எடுத்தல் என்பது  சொல்லுதல்
என்னும் பொருட்டாய் நின்றது.
 

எ. டு: தூணிப்பதக்கு   எனவரும்.     வருமொழி     தம்மகப்பட்ட
அளவையாகாமையின் விதி வேறு ஓதப்பட்டதென்க.   தூணித்தூணி எனத்
தன்முன்னர்த் தான் வருமிடத்தும் வல்லெழுத்து மிகுதல்  கொள்க.  மற்றும்
இதனானே இவ்வீற்று