நூன்மரபு240

எ.டு: நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும்   பீகுறிது,  சிறிது,
தீயது, புறத்தது எனவும் மீகண், செவி, தலை, புறம் எனவும் வரும்.
 

மீகண்-கண்ணின் மேற்பகுதியாகிய உறுப்பு. கண்மீ என்பது மீகண்  என
மாறிநின்று கண்ணின் ஒரு பகுதிக்குப் பெயராக நிற்றலின் அல்வழியாயிற்று.
கண்ணினது மேலிடம் என விரித்தற்கேலாமை அறிக.
 

இனி, மேலிடத்துக்கண் எனவிரித்து, வேற்றுமை முடிபு  என்று  கூறுவர்
உரையாசிரியன்மார்.   ஆசிரியர்   அல்வழியும்  வேற்றுமையும்   ஒருங்கு
கூறாராகலின் அவர் கருத்துப் பொருந்தாதென்க.
 

சூ. 251 :

இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் 

உடனிலை மொழியும் உளவென மொழிப 

(49)
 

க - து:

மேற்கூறிய மூன்றனுள் மீ  என்பதற்கு ஒருபுறனடை கூறுகின்றது.
 

பொருள்: இடத்தை   வரைந்துணர்த்தும்  சொல்லாகிய மீ  என்பதன்
முன் வல்லெழுத்து மிகும் உடனிலை  மொழிகளும்  உள  எனக்  கூறுவர்
புலவர். உடனிலை மொழிகள்  என்றது தொகைமொழிகளைப் போல ஒன்றி
நிற்கும் மொழிகளை.
 

எ. டு: மீக்கொடி-மீப்பல்   எனவரும்.    இவை   இருபெயரொட்டுப்
பண்புத்தொகையைப் போலக்  கொடியினது  மேற்பகுதியையும்   பல்லினது
மேற்பகுதியையும் உணர்த்தி ஒருசொல்  நீர்மைத்தாய்   நிற்குமாறு  கண்டு
கொள்க.
 

உம்மையை   வல்லெழுத்தென்பதனொடு  கூட்டி   மீங்குழி,  மீந்தோல்
எனச் சிறுபான்மை மெல்லெழுத்து மிகுதலும் கொள்க.
 

சூ. 252 :

 வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே
(50)
 

க - து:

ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண்  முடியுமாறு   கூறுகின்றது.
  

பொருள்: ஈகார   ஈற்றுப்     பெயர்     வேற்றுமைப்     பொருட்
புணர்ச்சிக்கண்ணும்   ஆகாரஈற்று    அல்வழிக்கோதிய   தன்மைத்தாய்க்,
கசதபக்கள் வரின் மிக்குமுடியும்.
 

எ.டு: ஈக்கால், சிறகு, தலை, புறம் எனவும் தீக்கடுமை, சிறுமை,  தீமை, பெருமை எனவும் வரும்.