சூ. 253 : | நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும் |
| ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் |
(51) |
க - து: | நீ என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்: நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், உருபு புணருங்கால் எய்தும் இயல்பினைப் பெற்று நிற்கும். அவ்விடத்து அவ்உருபியலிற் கூறியாங்கு வல்லெழுத்து மிகாது இயல்பாகப் புணரும். |
அஃதாவது நெடுமுதல் குறுகி னகரம் பெறுதலும் ஆண்டு ‘‘வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு’’ ஓதிய வல்லெழுத்து ஈண்டு மிகாமையும் பொருட்புணர்ச்சிக்குரிய தன்மையாகும் என்றவாறு. |
எ. டு: நின்கை, செவி, தலை, புறம் எனவரும். நிற்கண்டு என்பது இரண்டாவதன் திரிபாகும். |
உரையாசிரியன்மார் வல்லெழுத்தியற்கை என்பதற்கு இயைபு வல்லெழுத்து எனக்கூறுவது பொருந்தாமையறிக. |
சூ. 254 : | உகர இறுதி அகர இயற்றே |
(52) |
க - து: | உகர ஈற்று அல்வழிப்புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது. |
பொருள்: உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழிப் புணர்ச்சிக்கு ஓதிய இயல்பிற்றாகும். என்றது; கசதபக்கள் வரின் மிக்குமுடியும் என்றவாறு. |
எ. டு: கடுக்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (கடு-கடுமரம்) |
சூ. 255 : | சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும் |
(53) |
க - து: | உகர ஈற்றுச் சுட்டிடைச்சொல் புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: உகர ஈற்றுச் சுட்டிடைச்சொல் முன்னரும் மேற்கூறிய செய்கையை உடையதாய் வல்லெழுத்து மிக்கு முடியும். |
எ. டு: உக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் எனவரும். |
சூ. 256 : | ஏனவை வரினே மேனிலை இயல்பே |
(54) |
க - து: | உகரச் சுட்டின் முன் ஏனைக் கணங்கள் புணருமாறு கூறுகின்றது. |