நூன்மரபு242

பொருள : உகரச்சுட்டின்முன்  வல்லின  மல்லாத  ஏனைக்  கணங்கள்
வரின் மேல்  அகரச்   சுட்டிற்குக்   கூறிய  இலக்கணமேயாகும்.  ஏகாரம்
-இசைநிறை, ஈற்றசை.
 

எ. டு: உஞ்ஞாண்,  நூல், மணி எனவும் உவ்யாழ், உவ்வட்டு எனவும்
உவ்வணி, உவ்வாடை எனவும் ஊவயினான எனவும் வரும்.
 

சூ. 257:

சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே
(55)
 

க -து:

உகர   ஈற்றுச்   சுட்டுப்   பெயர்   புணருமாறு   கூறுகின்றது.
 

பொருள : சுட்டெழுத்துக்களை  முதலாக  உடைய உகர ஈற்றுச்சுட்டுப்
பெயரிறுதி இயல்பாகும்.
 

எ. டு: அதுகுறிது,  சிறிது,   தீது,   பெரிது  எனவரும்.  இது,   உது
என்பவற்றொடும் அவ்வாறே ஒட்டிக் கண்டு கொள்க.
 

சூ. 258:

அன்றுவரு காலை ஆவா குதலும்

ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் 

செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப 

(56)
 

க -து:

மேற்கூறிய   சுட்டுப்பெயர்    செய்யுள்    வழக்கிற்படும்   விதி
கூறுகின்றது.
 

பொருள்: உகரஈற்றுச்   சுட்டுப்பெயரின்   முன்னர்  அன்று  என்னும்
வினைக்குறிப்புச்சொல்   வருங்காலத்து    இறுதி    உகரம்  ஆகாரமாகத்
திரிதலும்,  ஐ   என்னும்  சாரியை   வருங்காலை   அவ்  உகரம்  தான்
ஊர்ந்து நிற்கும் மெய்யினைக் கெடாது நிறுத்தித்  தான்மட்டும்  கெடுதலும்,
செய்யுள்வழக்கிடத்து உரியதாகும் எனக் கூறுவர் புலவர்.
 

செய்யுள்  முடிபாதலான்  ஐகாரச்  சாரியை  புணருங்கால்  குற்றொற்று
இரட்டா   தென்க.   இவ்ஐகாரம்  சாரியை  என்பது  சுட்டுமுதல்  உகரம்
அன்னொடு  சிவணி  (உருபு-4)  என்றதனானும்   முன்னுயிர்  வருமிடத்து
ஆய்தப் புள்ளி (குற்-புண-18) என்றதனானும் உய்த்துணரப்படும்.
 

எ. டு:  அதாஅன்று    என்பது   வெண்பா யாப்பே.  இதாஅன்றம்ம,
உதாஅன்றம்ம  எனவும்  அதை  மற்றம்ம, இதை மற்றம்ம, உதை மற்றம்ம
எனவும் வரும்.
 

இனி நச்சினார்க்கினியர்,  ‘‘மொழிந்த  பொருளோடொன்ற  அவ்வயின்
முடியாததனையும் முட்டின்று முடித்தல்’’ என்னும்