நூன்மரபு248

எ. டு:  ஊனக்குறை,    செறிவு,   தளர்வு,   பொலிவு     எனவரும். ‘தக்கவழியறிதல்’  என்பதனான் இவ்விதி இயல்புகணத்தும் ஏற்பனவற்றொடு பொருந்திவருதல்  கொள்க.  எ. டு:  ஊன்  ஞாற்சி; ஊனஞாற்சி, மெலிவு, யாக்கை, வளர்ச்சி எனவும் ஊன் அழகு, ஆட்சி எனவும் வரும்.
 

அக்குச் சாரியையும் ஆறாவதன் உருபையும் வேறுபடுத்துணர்க என்பார்.
‘தக்கவழியறிதல்’ என்றார்.
 

சூ. 271 :

ஆடூ மகடூ ஆயிரு பெயர்க்கும்

இன்னிடை வரினும் மான மில்லை 

(69)
 

க-து :
 

ஆடூவும் மகடூவும் இன்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்:ஆடூ மகடூ என்னும்  அவ்இரண்டு  உயர்திணைப் பெயர்க்கும்
வல்லெழுத்து மிகுதலேயன்றி, இடையே இன்சாரியை வரினும்  குற்றமில்லை. உம்மை எச்ச உம்மை.
 

எ. டு:ஆடூவின்கை; மகடூவின்கை, செவி, தலை, புறம் எனவரும்.
 

சூ. 272 :

எகர ஒகரம் பெயர்க்கீ றாகா

முன்னிலை மொழிய என்மனார் புலவர்

தேற்றமும் சிறப்பும் அல்வழி யான 

(70)
 

க-து :
 

எகர ஒகர ஈறுகள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :எகரமும்   ஒகரமும்   முறையே  தேற்றமும் சிறப்புமாகிய
பொருள்  பற்றி  வருதலல்லாவிடத்துப்  பெயர்ச் சொற்களுக்கு ஈறாகவாரா. வினைச்சொல்லுள்  ஏவலாகிய  முன்னிலை  மொழியினவாகிக்  கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்று கூறுவர் புலவர்.
 

இச்சூத்திரம், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்னும் உத்திக்கும், ஞாபகங்கூறல் என்னும் உத்திக்கும் இனமாம். அஃதாவது, எஎன வருமுயிர் மெய்யீ றாகாது (மொழி-38) ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (மொழி-39) தெளிவின்  ஏயும்   சிறப்பின்   ஓவும்  அளபின்  எடுத்த  இசைய என்ப (இடை-13) என்பவற்றான் அவை ஏகார  ஓகாரங்களின்  அளபெடையாய்ப் பெயர்க்கு ஈறாவனவன்றித் தாமே ஈறாகா வாரா என்பதும்