நூன்மரபு250

எ. டு:யானேஎ  கொண்டேன்,  சென்றேன்,  தந்தேன்,   போயினேன்,
எனவும்  யானோஒ  கூறினென்,  செய்தனென்,  தந்தனென், பார்த்தனென்
எனவும் வரும்.
 

ஏனைப்  பெயர்களொடும்  பொருந்தும்  வினைகளைக் கூட்டிக் கண்டு
கொள்க.
 

சூ. 274 :

ஏகார இறுதி ஊகார இயற்றே(72)
 

க-து :

ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் : ஏகார ஈற்றுப் பெயர்ச்சொல்லிறுதி  அல்வழிக்கண்  ஊகார
ஈற்று  அல்வழிப்புணர்ச்சி   இயல்பிற்றாய்க்  கசதபக்கள்  வரின்  மிக்குப்
புணரும்.
 

எ. டு:ஏக்கடிது, சிறிது,  தீது,  பெரிது எனவரும். (ஏ-அம்பு) சேக்கடிது,
சிறிது, தீது, பெரிது என ஏனைப் பெயரொடும் கூட்டிக் கண்டு கொள்க.
 

சூ. 275 :

மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் 

கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும்

(73)
 

க-து :

ஏகார  இடைச்சொற்கள் பெயர் வினைகளொடு சார்ந்து நின்று
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஏகார   இடைச்சொல்  எதிர்மறைப்  பொருளினும் வினாப்
பொருளினும்   எண்ணுப்   பொருளினும்   பெயரொடு   கூடி  ஈறாயவழி
பொதுவிதியாக ஓதப்பட்ட வல்லெழுத்து மிகாமல் இயல்பாகப் புணரும்.
 

எ.டு :யானே   கொண்டேன்?  (யான்  கொண்டிலென் என்பது எச்சப்
பொருள்)  நீயே  கொண்டாய்? நிலனே, தீயே, காற்றே எனவும் வரும். பிற
வல்லெழுத்துக்களொடும் ஒட்டிக் கொள்க.
 

பிரிநிலையும்   ஈற்றசையும்  அப்  பொருள்நிலைமையான்  இயல்பாதல்
பெறப்படுமாகலான்   எடுத்தோதிற்றிலர்.   அன்றிக்  “கூறிய’’  என்பதனை
மிகையாக்கி அதனாற் கோடலுமாம்.
 

எ.டு : அவருள்யானே    பெரியென்   எனவும்   கழியே   சிறுகுரல்
நெய்தலொடு பாடோ வாதே எனவும் வரும்.
 

சூ. 276 :

வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே(74)
 

க-து :

ஏகார  ஈற்று  வேற்றுமைப்  பொருட்புணர்ச்சி  வருமாறு
கூறுகின்றது