எ. டு:யானேஎ கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன், எனவும் யானோஒ கூறினென், செய்தனென், தந்தனென், பார்த்தனென் எனவும் வரும். |
ஏனைப் பெயர்களொடும் பொருந்தும் வினைகளைக் கூட்டிக் கண்டு கொள்க. |
சூ. 274 : | ஏகார இறுதி ஊகார இயற்றே | (72) |
|
க-து : | ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் : ஏகார ஈற்றுப் பெயர்ச்சொல்லிறுதி அல்வழிக்கண் ஊகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி இயல்பிற்றாய்க் கசதபக்கள் வரின் மிக்குப் புணரும். |
எ. டு:ஏக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (ஏ-அம்பு) சேக்கடிது, சிறிது, தீது, பெரிது என ஏனைப் பெயரொடும் கூட்டிக் கண்டு கொள்க. |
சூ. 275 : | மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் |
| கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும் |
(73) |
க-து : | ஏகார இடைச்சொற்கள் பெயர் வினைகளொடு சார்ந்து நின்று புணருமாறு கூறுகின்றது. |
|
பொருள் :ஏகார இடைச்சொல் எதிர்மறைப் பொருளினும் வினாப் பொருளினும் எண்ணுப் பொருளினும் பெயரொடு கூடி ஈறாயவழி பொதுவிதியாக ஓதப்பட்ட வல்லெழுத்து மிகாமல் இயல்பாகப் புணரும். |
எ.டு :யானே கொண்டேன்? (யான் கொண்டிலென் என்பது எச்சப் பொருள்) நீயே கொண்டாய்? நிலனே, தீயே, காற்றே எனவும் வரும். பிற வல்லெழுத்துக்களொடும் ஒட்டிக் கொள்க. |
பிரிநிலையும் ஈற்றசையும் அப் பொருள்நிலைமையான் இயல்பாதல் பெறப்படுமாகலான் எடுத்தோதிற்றிலர். அன்றிக் “கூறிய’’ என்பதனை மிகையாக்கி அதனாற் கோடலுமாம். |
எ.டு : அவருள்யானே பெரியென் எனவும் கழியே சிறுகுரல் நெய்தலொடு பாடோ வாதே எனவும் வரும். |
சூ. 276 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே | (74) |
|
க-து : | ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி வருமாறு கூறுகின்றது |