பொருள் :ஏகார ஈற்றுச் சொல்லிறுதி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் மேற்கூறிய அல்வழியொடு ஒத்த இயல்பிற்றேயாம். |
எ. டு:ஏக்குறைத்தான், சிதைத்தான், தெரித்தான், பிணித்தான் எனவும்; வேக்குடம் எனவும் வரும். (வேக்குடம் - வேதலை உடைய குடம்) |
சூ. 277 : | ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே | (75) |
|
க-து : | எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் :ஒருசார் ஏகார ஈற்றுச் சொல்லிறுதிக்கு எகரம் தோன்றி வரும். |
எ. டு: ஏஎக்கொட்டில், ஏஎச்சாலை, துளை, புழை என வரும். எகரப்பேற்றினை மேலதனொடு ஒருங்கு கூறாமையான் இயல்பு கணத்திற்கும் எகரம் வருதல் கொள்க. |
எ.டு :ஏஎஞாற்சி, நேர்மை, வன்மை, அழகு எனவரும். |
சூ. 278 : | சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே | (76) |
|
க-து : | சே என்னும் மரப்பெயர் மெல்லெழுத்துப் பெறும் என்கின்றது. |
பொருள் :சே என்னும் விலங்கினை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி நிற்கும் பெயர்ச்சொல், ஒடு என்னும் மரப்பெயர்க்குக் கூறிய இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு வரும் என்றவாறு. |
எ. டு:சேங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
சூ. 279 : | பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும் | (77) |
|
க-து: | சே என்னும் விலங்குப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்:சே என்னும் சொல் பெற்றத்தை உணர்த்தி நிற்குமாயின் இன்சாரியை நிறைவாகப் பெறல் வேண்டும். |
எ. டு:சேவின் கோடு, செவி, தலை, புறம் எனவரும். ‘‘முற்ற’’ என்றதனான் இயல்புகணத்தும் இன்சாரியை கொள்க. |
எ. டு:சேவின் ஞேயம், நலம், மடி, வால், இமில் என வரும். சேமணி எனச் சாரியை இன்றிவருதல் இடைக்கால வழக்காகலின் புறனடையாற் கொள்ளல்தகும். |