நூன்மரபு253

‘‘அகமென் கிளவிக்குக் கை முன் வரினே’’

(புள்ளி-20)

‘‘இலமென் கிளவிக்குப் படுவரு காலை’’

(புள்ளி-21)

‘‘உரையசைக் கிளவிக் காவயின் வரூஉம்’’

(மொழி-1)

‘‘இருமொழிக் குரித்தே’’

(மொழி-42)
 

‘‘எகர   ஒகரம்   பெயர்க்கீ   றாகா   (உயிர்மய-70) எனக் குவ்வுருபு
வன்றொடர்க் குற்றியலுகரமாக நின்று புணர்ந்தது.
 

இதனது இதுவெனும் அன்ன கிளவியும் 

(வேற்-18)
 

நாளது  சின்மையும்  இளமைய தருமையும் (அகத்-42) என அது உருபு
உயிர்த்தொடர்க்  குற்றியலுகரமாக  நின்று  புணர்ந்தது.  ஏனை இன் ஆன்
கண் முதலியவற்றையும் இவ்வாறே ஆசிரியர் கூறியுள்ளமை கண்டு கொள்க.
அவ்வாற்றான்  ஐயுருபு - ‘புலியைக்  கொணர்ந்தான்,  கனியைத் தின்றான்,
நீரைப் பருகினான், யானையைப் பார்த்தான்’ எனவும் சாரியையொடும் கூடி
‘ஊரினைக்கண்டான்,  யாழினைப்  பெற்றான்,  கொடியினைப்  பார்த்தான்’
எனவும் வரும்.
 

சூ. 281 :

சுட்டு முதலிறுதி உருபியல் நிலையும்(79)
 

க-து :

ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :சுட்டெழுத்தினை  முதலாகக்   கொண்ட   ஐகார  ஈற்றுப்
பெயரிறுதி    வேற்றுமைப்   பொருட்புணர்ச்சிக்கண்   உருபிற்கு   ஓதிய
இலக்கணத்தான்    நிலைபெறும்.   என்றது;   வற்றுச்சாரியை   பெற்றுப்
புணருமென்றவாறு.
 

எ. டு:அவையற்றுக்கோடு;   இவையற்றுக்கோடு,  செவி,  தலை, புறம்
எனவரும்.
 

வருமொழி வரையாது  கூறினமையின் சாரியைப் பேறு இயல்புகணத்தும்
கொள்க.  எ.டு :  அவையற்று  நெஞ்சு, வயிறு, அழகு  எனவரும். வற்றின்
வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது.
 

சூ. 282 :

விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்

ஆமுப் பெயரும் சேமர இயல
(80)
 

க-து :

ஐகார ஈற்றுச் சிலமரப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :விசை  என்னும்  மரத்தை உணர்த்தும் சொல்லும் ஞெமை,
நமை  என்னும்  மரப்பெயர்களும்  ஆகிய   மூன்று  பெயர்ச்  சொல்லும்
சேஎன்னும் மரத்திற்கு ஓதிய இலக்கணத்தனவாம்.