அஃதாவது; ஒத்தமெல்லெழுத்து மிக்குப்புணரும் என்றவாறு. விசைமரக் கிளவியொடு ஒப்பக் கூறினமையின் ஞெமை, நமை என்பவை மரப்பெயர் என்பது பெற்றாம். |
எ. டு:விசைங்கோடு; ஞெமைங்கோடு; நமைங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
ஒன்றென முடித்தல்; தன்னின முடித்தல் என்பதனான் உழை, அமை, உடை என்னும் மரப்பெயர்களுக்கும் இவ்விதி கொள்க. |
எ.டு :உழைங்கோடு; அமைங்கோடு; உடைங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
சூ. 283 : | பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் |
| நினையுங் காலை அம்மொடு சிவணும் |
| ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே |
| மெய்யவண் ஒழிய என்மனார் புலவர் |
(81) |
க-து : | ஐகார ஈற்று மரப்பெயர்ச் சிலவற்றிற்கு வேறுவிதி கூறுகின்றது. |
|
பொருள்:ஐகார ஈற்று மரப்பெயர்ச் சொற்களை ஆராயுமிடத்துப், பனை என்னும் சொல்லும், அரை என்னும் சொல்லும், ஆவிரை என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்திப் புணரும்; ஆண்டு இறுதி ஐகாரம் அரை என்னும் சொல்லைத் தவிர்த்து ஏனை இரண்டிலும் தான் ஊர்ந்து நின்றமெய் கெடுதலைத் தவிர்த்துத்தான் மட்டும் கெடும் என்று கூறுவர் புலவர். |
எ.டு:பனங்காய், செதிள், தோல், பூ எனவும் ஆவிரங்கோடு, செதிள், தோல், பூ எனவும் அரையங்கோடு, செதிள், தோல், பூ எனவும் வரும். |
‘‘நினையுங்காலை’’ என்றதனான் தில்லை, தாழை என்னும் மரப்பெயர்களும் இறுதி ஐகாரங்கெட்டு அம்முப்பெறுதல் கொள்க. எ.டு: தில்லங்காய், செதிள், தோல், பூ- தாழங்காய், செதிள், தோல், பூ எனவரும். தூதுளை, வழுதுணை, ஓலை முதலியன மரப்பெயர்கள் அல்லவாதலின் அவை அம்முப் பெறுதல் புறனடையாற் கொள்ளல்தகும். |
சூ. 284 : | பனையின் முன்னர் அட்டுவரு காலை |
| நிலையின் றாகும் ஐயென் உயிரே |
| ஆகாரம் வருதல் ஆவயி னான |
(82) |
க-து : | பனை என்னும் சொல், வருமொழி அட்டு என்பதனொடு புணருமாறு கூறுகின்றது. |