நூன்மரபு257

சூ. 289 :

ஓகார இறுதி ஏகார இயற்றே(87)
 

க-து : 

ஓகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஓகார  இறுதியாகிய  பெயர்கள்  அல்வழிக்கண் கசதபக்கள்
வரின் ஏகார ஈற்று இயல்பிற்றாகும்.
 

எ. டு:ஓக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (ஓ-மதகு நீர்த்தாங்கும்
பலகை)
 

சூ. 290 :

மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் 

கூறிய வல்லெழுத் தியற்கை யாகும் 

(88)
 

க-து : 

ஓகாரஈற்று இடைச் சொல் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் :எதிர்மறைப்  பொருளை   எச்சமாகக்   கொள்ள  நிற்கும்
ஓகாரமும்  வினாப்பொருள்பட  நிற்கும்  ஓகாரமும்  ஐயப்பொருள்  தந்து
நிற்கும் ஓகாரமும் வல்லெழுத்துமிகாமல் இயல்பாகும்.
 

எ.டு :யானோ  கொண்டேன்?,  சென்றேன்,  தந்தேன்,  போயினேன்
எனவும்;  நீயோ  கொண்டாய்?,  சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்;
காடோ, கடறோ, புற்றோ, புதரோ எனவும் வரும்.
 

சூ. 291 :

ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே(89)
 

க-து :

ஒழியிசை ஓகாரத்திற்கு மேற்கூறிய விதி பொருந்துமென்கின்றது.
 

பொருள்:ஒழியிசை   ஓகாரத்தின்   நிலையும்  மேல்மொழிந்தவற்றின்
இயல்பிற்றாய்க் கசதபக்கள்வரின் மிகாது இயல்பாகும்.
 

எ.டு:கொளலோ   கொண்டான்,  செலலோ   சென்றான்   எனவரும்.
கொண்டுய்யப் போயினானல்லன் என்பது பொருள்.
 

இனித்,  தன்னின  முடித்தல்   என்னும்  உத்தியான்,  பிரிநிலையாயும்
தெரிநிலையாயும்,   சிறப்பாயும்,  எண்ணுநிலையாயும்   வரும்   ஓகாரமும்
இயல்பாதல் கொள்க.
 

எ. டு:யானோ தேறேன்  அவர்  பொய் வழங்கலரே எனவும் நன்றோ
தீதோ  அவர்  கண்டது எனவும்  ஓஒ கொண்டான் எனவும் (சிறப்பின் ஓ
ஆதலின் ஒகரம் தோன்றிற்று)  குன்றுறழ்ந்த  களிறென்கோ, கொய்யுளைய
மாவென்கோ எனவும் வரும். ஈற்றசை ஓகாரத்திற்கும் இஃதொக்கும்.