நூன்மரபு258
சூ. 292 :

வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே

ஒகரம் வருதல் ஆவயி னான 

(90)
 

க.து :

ஓகார ஈற்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள்:ஓகார  ஈற்றுப்  பெயர்,  வேற்றுமைப்  பொருட்புணர்ச்சிக்
கண்ணும் மேற்கூறிய அல்வழி இயல்பிற்றாகும்; ஆயினும் அவ்விடத்து ஓர்
ஒகரம் தோன்றி வருதல் வேண்டும்.
 

எ.டு :ஓஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் கோஒக் கடுமை,
சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.
 

சூ. 293: 

இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்(91)
 

க-து :

கோ  என்னும் சொல் இல்என்பதனொடு  புணர்தற்கண்  எய்தும்
சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் :கோ  என்னும்  ஓகார  ஈற்றுச்  சொல்லை ‘இல்’ என்னும்
சொல்லொடு  கூட்டிச்  சொல்லின் ஒகரந் தோன்றாது இயல்பாகப் புணரும்.
ஏற்புழிக்கோடல் என்பதனான் ‘கோ’ நிலைமொழி எனக் கொள்க.
 

எ.டு :கோவில் எனவரும். கோயில் எனவும் வரும் கோயில்=அரசனது
இல்லம் என்பது பொருள்.
 

சூ. 294 :

உருபியல் நிலையும் மொழியுமா ருளவே

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் 

(92)
 

க-து :
 

ஓகார   ஈற்றுச்சொல்  சில,  உருபியலிற்  கூறிய   விதிபெறும்
என்கின்றது.
 

பொருள் :ஓகார  ஈற்றுச்  சொற்களுள்  உருபு  புணர்ச்சிக்கு  ஓதிய
இலக்கணத்தான் நிலைபெறும் சொற்களும் உள. அவ்விடத்து வல்லெழுத்து
மிகாது இயல்பாகும்.
 

எ.டு :கோஒன்கை,  செவி,  தலை, புறம் எனவரும். ஏனைய வந்துழிக்
கண்டு கொள்க.
 

சூ. 295 :

ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 

அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே

அவ்விரு ஈற்றும் உகரம் வருதல்

செவ்வி தென்ப சிறந்திசி னோரே

(93)
 

க-து : 

ஒளகார ஈற்றுப் பெயர் இருவழியும் புணருமாறு கூறுகின்றது.