என்றது; உகரம் பெறுதலும், கசதபக்கள் வரின் மிகுதலும், ஞநமவக்கள் வரின் மிகாது இயல்பாதலும் ஆம்: வேற்றுமைக்கு விதி மேல் விதந்து கூறுதலின் இஃது அல்வழிக் கென்பது பெறப்படும். | எ.டு : பொருநுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும் வரும். ‘வெரிந்’ என்பதனொடும் இவ்வாறே கூட்டுக. | சூ. 299 : | வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும் | (4) | |
க-து : | நகர ஈற்றுப் பெயர்க்கு வேற்றுமைப் புணர்ச்சி கூறுகின்றது. | | பொருள் :மேற்கூறிய நகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் உகரம் கெட அகரம் வந்து நிலைபெறும். | எ.டு :பொருநக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வரும். ‘‘உகரங்கெட’’ என்றதனான் ‘‘உயவல் யானை வெரிநுச் சென்றன்ன’’ என உகரம் கெடாது நிற்றலும் கொள்க. | சூ. 300 : | வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி | | வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை | (5) | க-து : | வெரிந் என்னும் பெயர்க்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. | | பொருள் : வெரிந் என்னும் சொல்லிறுதி மேற்கூறிய சாரியை எழுத்தொடு உடன்கெடுமிடத்து மெல்லெழுத்து வருதலாகிய இடனும் உடையதாகும். | கெடும் என்பதற்கு இதுவே விதியாகக் கொள்ள வைப்பாராய்க் “கெடுவழி” என்றார். எனவே கெடுவழி என்பதற்குக், கெடும் கெட்டவழி எனப் பொருள் விரித்துக் கொள்க. | எ.டு :வெரிங்குறை, வெரிஞ்சிறப்பு, வெரிந்தளர்ச்சி, வெரிம் பொலிவு எனவரும். | ‘இடனுடைத்தே’ என்றதனான் ‘வெயில் வெரி(ந்) நிறுத்த’ என மெல்லெழுத்து வரக் கெடுதலும், வெரிந்யாப்பு, வெரிந்உயர்ச்சி என யகரமும் உயிரும் வரும்வழிக் கெடாமையும் கொள்க. இன்னும் அதனானே வெரிநு ஞாற்சி, மாட்சி, வலிமை என இயல்புகணத்து உகரம் பெற்று வருதலும் கொள்க. வெரிந் = முதுகு. |
|
|