v
 

நான்  எந்தவிதப்   பயனையும்    எதிர்பார்க்கவில்லை.   இதனை   ஒரு
தவமாகவே செய்யவிரும்புகிறேன்  மற்றவை  திருவருள்  விருப்பம்  என்று
சொன்னார்.
 

இறைவன்  அருள்கிட்டினால்  எவரும் எதையும் செய்ய இயலுமல்லவா,
தமிழ்த்தெய்வம் இப்பணிக்கு இவரைக் கருவியாகக் கொள்ள எண்ணியுள்ளது
போலும்,  என  நினைத்து  உன்  விருப்பப்படியே  செய்,  அம்பிகையின்
அருளால்    எல்லாம்     சிறப்பாக     முடியும்     என்று    உளமார வாழ்த்தியனுப்பினேன். காணும்போதெல்லாம் அது பற்றிக்  கேட்டு மகிழ்ந்து உற்சாகமூட்டி   வந்தேன்.  இவருடைய  பொருளாதார  நிலையை  ஓரளவு அறிவேனாதலால்,   இந்நூலை   வெளியிட   ஆகும்   செலவைச்   சில
நல்லன்பர்களை   ஏற்கச்   செய்யலாம்   எனக்கருதி  ஒரு  சமயம்  அது
பற்றிக்கூறினேன். அப்பொழுது  ‘சுவாமி  அந்தப்  பொறுப்பையும்  நானே
ஏற்கும்படியான வாய்ப்பை இறைவன் எனக்கருள  வாழ்த்துங்கள்’  என்றார். உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் என  வாழ்த்தினேன்.  அவ்வாறே
இறைவன்   திருவருளால்   இப்பொழுது   எழுத்ததிகார   உரை  வெளி
வருகின்றது. மற்றவை  தொடர்ந்து   விரைவாக  வெளிவர   இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 

தொல்காப்பியத்தைப் பற்றிக் கற்றவர் வாயிலாகக் கேட்டறிந்ததைத் தவிர
அதைப்  பயிலும்  சூழல்  எனக்கு  ஏற்படவில்லை. தமிழ்  இலக்கணத்தில்
ஆழ்ந்த   புலமையும்  ஆராய்ச்சியுமுடைய நல்லறிஞர்கள்  இவ்வுரையைப்
பற்றி   உலகுக்கு    உரைக்கவேண்டும்.    பொருளையோ    புகழையோ
எதிர்பார்க்காமல்  இந்த   அரிய   தொண்டினைச்    செய்துள்ள    என்
அன்பிற்குரிய   பாலசுந்தரத்திற்கு   எல்லா   நலனும்   வளனும் வாய்க்க
வாழ்த்துகிறேன். இவர்  இன்னும் பல்லாண்டுகள் உடல்நலத்தோடு வாழ்ந்து
செந்தமிழ்க்குச் சிறப்பான தொண்டுகள் புரிய எல்லாம் வல்ல சவுந்தரநாயகி
சமேத  சுந்தரேசப்பெருமானின்  திருவடிகளைச்  சிந்தித்து வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு!
 

செ. காத்தையா