சூ. 301 : | ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே | (6) |
| க-து : | இதுவுமது. | | பொருள் :மேற்கூறிய வெரிந் என்னும் சொல் இறுதி முழுதுங் கெட்டவிடத்து மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிகுதலும் அதற்கு உரித்தாகும். | எ. டு:வெரிக்குறை, சுழி, தோல், பொலிவு எனவரும். இஃது அருகிய வழக்காகலின் உம்மை இழிவு தோன்ற நின்றது. | சூ. 302 : | ணகார இறுதி வல்லெழுத் தியையின் | | டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே | (7) | க-து : | ணகார ஈறு வேற்றுமைக்கண் புணரும் பொதுவிதி கூறுகின்றது. | | புள்ளியீறுகளின் திரிபு, வேற்றுமைப் புணர்ச்சிக்கண் மிக்கு நிகழ்தலின் இவ்வியலுள் பெரும்பான்மையும் வேற்றுமைப் புணர்ச்சி முற்கூறிப் பின்னர் அல்வழிப் புணர்ச்சி கூறுகின்றார். | பொருள்: ணகர ஒற்றினை இறுதியாக உடைய பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்துவரின் ணகரம் டகரமாகத் திரியும். பொருட்கென்றது வேற்றுமை மயக்கம். | எ. டு: மட்குடம், சாடி, தூதை, பானை எனவரும். கூறப்படும் விதிகள் உருபொடு புணர்ந்து நிற்கும் மொழிகட்கும் ஒக்குமென்பது மேல்விளக்கப்பட்டமையான் ஏழாவதன் உருபு புணர்ந்து ணகர ஈறாக நிற்கும் சொற்களுக்கும் இவ்விதி ஒக்கும். எ.டு : அவன்கட் சென்றான், ஆங்கட்சென்றான் எனவரும். |
சூ. 303 : | ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை | (8) | |
க-து : | ஆண் பெண் என்னும் பெயர்கட்கு எய்தியது விலக்குகின்றது. | | பொருள்: ஆண், பெண் என்னும் விரவுப் பெயர்கள், அஃறிணை விரவுப் பெயர்க்குக் கூறிய இலக்கணத்தைப் பெறும். | என்றது : ‘‘அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே’’ (தொகை-13) என்னும் விதிப்படி இயல்பாகப் புணரும் என்றவாறு. அஃறிணை இயற்கை என்றதனான் இவை உயர்திணைப் பொருளவாய் நிற்பவை என்பது புலப்படும். | எ. டு: ஆண்கல்வி - பெண்கல்வி, சால்பு, திட்பம், பண்பு எனவரும். ஆண்கை; பெண்கை, செவி, தலை, புறம் எனக் காட்டின், கை முதலியவை இருதிணைக்கும் பொதுவானவை |
|
|