யாதலின் அவை அப்பொதுச் சூத்திரத்துள் அடங்குமென்க. ஆண்மை, பெண்மை என்னும் பண்புகள் உயர்திணைக்குரியவை என்பதைக் ‘குடிமை ஆண்மை இளமை மூப்பே’ (கிளவி-57) என்னும் சூத்திரத்தானறிக. |
இவற்றின் அல்வழி முடிபு ‘‘மொழிமுத லாகும்’’ (தொகை-5) என்பதனுள் அடங்கும். எ.டு: ஆண்கற்றான், பெண்கற்றாள் எனவரும். பிறவும் அன்ன. |
சூ. 304 : | ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே (9) |
க-து : | ஆண் என்னும் மரப் பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள்:‘ஆண்’ என்னும் மரத்தை உணர்த்தும் சொல் அரை என்னும் மரப்பெயரியல்பிற்றாய் அம்முச்சாரியை பெற்றுப் புணரும். |
எ. டு:ஆணங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்பு கணத்துங்கொள்க. அவ்வழிச் சாரியை மகரம் (சூ. 310) பொது விதியாற்கெடுமென அறிக. எ.டு: ஆணநார், ஆணவேர், ஆணவெழில் எனவரும். |
சூ. 305 : | விண்ணென வரூஉம் காயப் பெயர்வயின் |
| உண்மையும் உரித்தே அத்தென் சாரியை |
| செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை |
(10) |
க-து: | விண் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : விண் ணென்னும் குறிப்பன்றி ஆகாயத்தை உணர்த்தி வரும் சொல்லின்கண், செய்யுள் வழக்கிடத்து அத்து என்னும் சாரியை உளதாதலும் உரியதாகும். |
செஞ்சுடரின் வெப்பத்தால் காய்கின்ற இடமாதலின் (காய்+அம்) விண்வெளிக்குக் காயம் என்பது காரணப் பெயர். அஃது வியப்பையும் பரப்பையும் உணர்த்தும் ஆ என்னும் உரிச்சொல்லொடு கூடி ‘‘ஆகாயம்’’ என வழங்கும். இது தமிழ்ச்சொல். |
எ. டு: விண்ணத்துக் கொட்கும், சுழலும், திரியும், பரவும் எனவரும். ஏனைக்கணத்தும் விண்ணத்து நிலவும், வளரும், இயங்கும் எனவரும். |