‘‘உண்மை’’ என்றது உண்டாகி வரும் என்னும் குறிப்புப் பொருள்பட நின்றது. உம்மையான் சாரியை இன்றி “விண்குத்து நீள்வரை’’ எனவும் வரும். விண்வத்துக்கொட்கும் என உடம்படுமெய் பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். அவர் ‘உடம்படுமெய்’ என்பதன் இயல்பு நோக்கினாரில்லை. | சூ. 306 : | தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல | (11) | |
க-து : | ணகர ஈற்றுத் தொழிற் பெயர்கட்கு மாட்டேற்றுவகையான் விதி கூறுகின்றது. | | பொருள் :ணகார ஈற்று முதனிலைத் தொழிற் பெயரெல்லாம் ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல இருவழியும் புணரும். | என்றது; உகரம் பெற்று வன்கணம் வரின் மிக்கும், ஏனைக் கணங்கள் வரின் இயல்பாயும் புணருமென்றவாறு. | எ.டு :மண்ணுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் மண்ணு ஞான்றது, நீண்டது, வலிது, இனிது எனவும் வரும். இவை அல்வழி. மண்ணுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை, நன்மை, வன்மை, அருமை எனவரும். இவை வேற்றுமை (மண்ணுதல்-கழுவுதல்) | ‘உரிஞ்’ என்றாற்போல ஒரே ஒரு சொல்லன்றி மண், பண், உண், எண், பேண், காண் என ணகர ஈற்றுத் தொழிற் சொற்கள் பலவாக உளஆதலின் எல்லாம் என்றார். ‘‘ஒத்த எண்ணு முன்வரு காலை’’ (சூ.317) என ஆசிரியர் உடம்பொடு புணர்த்துக் கூறியுள்ளமையான் தொழிற் பெயரல்லாத பொருட்பெயரும் சிறுபான்மை உகரம் பெற்றுவருதல் கொள்க. எ.டு: வெண்ணுக்கரை, பண்ணுப் பெயர்த்து, மண்ணுவீடு எனவரும். |
சூ. 307 : | கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே | (12) | |
க-து : | ணகார ஈற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :தொழில் முதலிய காரணங்களாற் பிறந்த ணகர ஈற்றுக் கிளைப் (சாதி) பெயர்கள் எல்லாம் மேற்கூறிய திரிபு கொள்ளுதல் இல்லை. அவை இயல்பாகப் புணரும். திரிபு கொளஇல என மாறிக் கூட்டிப் பொருள் கொள்க. | எ. டு:உமண்குடி, சேரி, தோட்டம், பாடி எனவரும். | பாண்குடி, வேளாண்குடி எனக் கிளைப்பெயர் பலவாக உள்ளமையான் எல்லாம் பாணச்சேரி என்றார். ‘கொளத்திரிபிலவே’ என்றதனான் எனச்சாரியை பெறுதலும் கொள்க. |
|
|