க-து : | மகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது. |
|
பொருள் :மகர ஈற்றுச் சொற்கள் எல்லாம் அல்வழிப் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்தாகும். |
‘மெல்லெழுத்தாகும்’ என்றதனான் வருமொழி வல்லெழுத்து என்பது பெறப்படும். வல்லெழுத்துவரின் திரியுமெனவே ஏனைக் கணங்கள்வரின் மேல் வேற்றுமைக்கு ஓதிய விதிகளுள் ஏற்பன பெற்றுப்புணரும் என்பது உய்த்துணரப்படும். |
‘‘அல்வழி யெல்லாம்’’ என்றதனான் தொகையின் கண்ணும், தொடரின் கண்ணும், ஈறுகெட்டு விதியீறாக நிற்ப, வரும் வல்லெழுத்து மிகுதலும், இடையெழுத்து வரக் கெடாது இயல்பாதலும், உயிர்வர உடம்படுமெய் பெற்றுப் புணர்தலும் பிறவுமெல்லாம் கொள்ளப்படும். |
எ. டு:மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மர நீண்டது, அகரமுதல் எனவும்; மரம்யாது, மரம்வலிது எனவும்; கொல்லும்யானை, ஆய்தவெழுத்து எனவும்; வட்டத்தகடு, நீலக்கண், ஆய்தப்புள்ளி எனவும் வரும். |
சூ. 315 : | அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே |
| முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் |
| வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க |
| மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான |
(20) |
க-து : | அகம் என்னும் சொல் கை என்பதனொடு புணருங்கால் எய்தும் நிலை மொழித் திரிபு கூறுகின்றது. |
|
பொருள் :அகம் என்னும் சொல் முன்னர்க் கை என்னும் சொல்வரின் முதற்கண் நிற்கும் அகரம் தான் கெடுதலினின்று ஒழிய அதற்கு முன்னின்ற ககர உயிர் மெய்யும் மகர ஒற்றும் கெடுதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமைத்தின்று, அவ்விடத்துக், கை என்பதற்குரிய மெல்லெழுத்துமிகும். |
எ. டு:அகம்+கை = அங்கை எனவரும். பொதுவிதியான் மகரம் கெட்டு நிற்பவும் முன்னவை என அதனையும் அடக்கிக்கேடு கூறினமையான் அகஞ்சிறை எனற்பாலது அஞ்சிறை என வருதலும் கொள்க. |