நூன்மரபு300

பொருள் :சுட்டுவகர  ஈறு  ஒழிந்த  ஏனை  வகர ஈற்றுச் சொல்லாகிய
தெவ்  என்னும்   உரிச்சொல்லீறு   இருவழியும் ஞகார  ஈற்றுத்  தொழிற்
பெயரியல்பிற்றாய் உகரம் பெற்றுப் புணரும்.
 

எ. டு:  தெவ்வுக்கடிது, சிறிது, தீது, பெரிது  எனவும்  தெவ்வுக் கடுமை,
சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஞ ந ம என்பவற்றொடும் ஒட்டிக்
கொள்க. தெவ்வு = பகைமை.
 

இதனானும்   தெவ்   என்னும்   சொல் வினைநிலை எய்தி  வாராமை
புலனாம்.  உகரம் பெறாமல் மகரத்தொடு   புணருமிடத்துத்   தெம்முனை,
தெம்மடங்கிய  எனவரும். காரணம்   வகரம்  மகரத்தொடு   மயங்குதற்கு
ஏலாமையான் மகரமாகத் திரியும். இதனைப் புறனடையாற் கொள்க.
 

சூ. 383 :

ழகார இறுதி ரகார இயற்றே 
(88)
 

க-து :

ழகார ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது.
 

பொருள் :  ழகார  ஈற்றுப் பெயரிறுதி வன்கணம்வரின் ரகார ஈற்றிற்கு
ஓதிய இயல்பிற்றாய் மிக்குப்புணரும்.
 

எ. டு:  பூழ்க்கால், செவி, தலை, புறம் எனவரும்.
 

ரகார ஈற்றுச்  சூத்திர உரையுள் அல்வழிக்குக் கூறியவிளக்கம் இதற்கும்
ஒக்குமாதலின், ழகார ஈற்று அல்வழிக்கண் யாழ் குறிது, சிறிது, தீது, பெரிது
என வல்லெழுத்து இயல்பாக முடியுமெனக் கொள்க. சிறுபான்மை வீழ்குறிது
-   வீழ்க்குறிது   என   உறழ்ந்து   முடிதலையும்   பூழ்ப்பறவை   என
இருபெயரொட்டின்கண்  மிக்கு  முடிதலையும்  உரையிற்கோடல்  என்னும்
உத்தியாற் கொள்க.
 

சூ. 384 :

தாழென் கிளவி கோலொடு புணரின் 

அக்குஇடை வருதல் உரித்து மாகும் 

(89)
 

க-து :

தாழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :தாழ் என்னும் பெயர்ச்  சொல், கோல் என்னும் சொல்லொடு
புணரின்,  அக்கு  என்னும்  சாரியை இடையே வருதற்கு உரித்தும் ஆகும்.
உம்மை - எதிர்மறை.
 

எ.டு :  தாழக்கோல்  எனவரும்.  உம்மையால்  தாழ்க்கோல்  எனவும்
வரும்.   இத்தொகை,   தாலிப்பொன்   என்பது   போலத்   தாழிற்குரிய
கோல்   எனவிரியும்.   தாழாகிய  கோல்  என  இருபெயரொட்டெனினும்
ஒக்கும். கோல் என்பது கணைமரம்.