தாழ் என்பது தழுவு என்னும் சொல்லின் திரிபாகும். அது புதவக்கதவங்களைத் தழுவி (அடைத்து) நிற்பதாகலின் காரணப் பெயராம். அத்தாழினை வனைதற்குரிய தடியே ஈண்டுக்கோல் எனப்பட்டதாகலின், நான்காவது விரிதலே சால்புடைத்தென்க. |
உரையாசிரியன்மார் தாழக்கோலினைத் திறவுகோல் எனக் கருதித், தாழைத் திறக்குங்கோல் என இரண்டாவது விரியும் என்றனர். திறவுகோல் என்பது திறக்கும் கருவி; அது தாழ் எனற் கொல்லாது. |
சூ. 385 : | தமிழென் கிளவியும் அதனோ ரற்றே |
(90) |
க-து : | தமிழ் என்னும் சொல்லும் அக்குப்பெற்று முடியும் என்கின்றது. |
பொருள் :தமிழ் என்னும் ழகர ஈற்றுச் சொல்லும் தாழ் என்பதற்கு ஓதியாங்கு அக்குச்சாரியை பெற்றுப் புணரும். |
எ.டு :தமிழக்கூத்து, செய்தி, தூய்மை, பாணி எனவரும். தமிழிற்குரிய கூத்து என நான்காவது விரிக்க. ஆரியக்கூத்து அன்று என்றவாறாம். உடைமைப் பொருள் விரிக்கின் இச்சாரியை ஆறனுருபாய் மயக்கஞ்செய்யுமென்க. |
மேலைச்சூத்திரத்து எதிர்மறை உம்மையான் தமிழ்க்கூத்து, தமிழ்ச்செய்தி எனச் சாரியை இன்றியும் பொதுவிதியாற் புணருமென்க. |
கோலொடு புணரின் என்றாற்போல இதற்கு வருமொழி வரைந்து கூறாமையான் ஏனைக்கணம்வரினும், சாரியைப் பேறு கொள்க. |
எ. டு:தமிழஞாலம், தமிழநூல், தமிழமரபு, தமிழவாழ்வு, தமிழவரையர் எனவரும். |
சூ. 386 : | குமிழ்என் கிளவி மரப்பெய ராயின் |
| பீரென் கிளவியொடு ஓரியற் றாகும் |
(91) |
க-து : | குமிழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள் : குமிழ் என்னும் சொல் தொழிற் பெயரன்றி மரப்பெயராயின் பீர் என்னும் சொல்லொடு ஒத்த இயல்பிற்றாய் மெல்லெழுத்தும், அம்முச்சாரியையும் பெற்றுப்புணரும். |
எ.டு : குமிழ்ங்கோடு - குமிழங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |