சூ. 394 : | உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது |
(99) |
க-து : | ஏழ் என்பது உயிரொடு புணரின் திரியாது இயல்பாக வரும் என்கின்றது. |
பொருள்: ஏழ் என்னும் சொல் தன்முன்னர் மேற்கூறிய சொற்களேயன்றி உயிர்முதன் மொழிவரினும் இயல்பாகுமென மேற்கூறிய அவ்விலக்கணத்தின் மாறுபடாது. |
எ. டு: ஏழுழக்கு, ஏழகல், ஏழிலை, ஏழுரி, ஏழிரண்டு, ஏழைந்து எனவரும். இங்ஙனம் எல்லாப்பெயரொடும் ஒட்டிக் கொள்க. ஏழிருபது, ஏழெழுபது என அடையொடுவரினும் ஒக்கும். |
சூ. 395 : | கீழ்என் கிளவி உறழத் தோன்றும் |
(100) |
க-து : | கீழ் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: கீழ் என்னும் பண்புப் பெயர்ச்சொல் வல்லெழுத்து வரின் இயல்பாயும், மிக்கும், உறழ்ந்தும்வரும். |
எ. டு: கீழ்குலம் - கீழ்க்குலம், சாதி, தொழில், பண்பு எனவரும். |
பொதுப்படக் கூறினமையின் கீழ் என்பது இடமுணர்த்தி வருங்காலும் இவ்விதிகொள்க. எ. டு: கீழ்குன்றம், சுனை, தெற்றி, பாறை எனவும் கீழ்க்குன்றம், சுனை, தெற்றி, பாறை எனவும் வரும். இடமேயன்றித் திசையுணர்த்தி வருங்காலும் இவ்விதி ஒக்கும். |
எ.டு: கீழ்குளம் - கீழ்க்குளம், சேரி, தோட்டம், பாடி எனவரும். உறழத் தோன்றுதல் பண்பிற்கும், மிகுதல் ஏனையவற்றிற்கும் வலியுடைத்தென்க. |
சூ. 396 : | ளகார இறுதி ணகார இயற்றே |
(101) |
க-து : | ளகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ளகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் ணகர ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாய் டகரமாகத் திரிந்து புணரும். |
எ.டு: முட்குறை, சிறை, தலை, புறம் எனவரும். உதட்கோடு, செவி, தலை, புறம் எனப் பிறவற்றொடும் ஒட்டிக்கொள்க. (உதள்-ஆடு) |
சூ. 397 : | மெல்லெழுத் தியையின் ணகார மாகும் |
(102) |
க-து : | ளகர ஈறு மென்கணம் வரின் திரியுமாறு கூறுகின்றது. |