நூன்மரபு306

பொருள்:  ளகர  ஈற்றுப்  பெயர்  மெல்லெழுத்துவரின்   ணகரமாகத்
திரியும்.
 

எ. டு:  முண்ஞெரி, முண்ணுனி, முண்மரம் எனவரும். ளகரப்புள்ளிமுன்
கசபவய  என்பவையன்றிப்  பிறமெய்கள்  மயங்காமையின்  அல்வழியினும்
மெல்லெழுத்துவரின் இத்திரிபு எய்துமெனக் கொள்க.
 

எ. டு:முண்ஞான்றது, முண்ணீண்டது, முண்மாண்டது எனவரும். இஃது
உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தி.
 

சூ. 398 :

அல்வழி யெல்லாம் உறழென மொழிப 
(103)
 

க-து :

ளகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
  

பொருள்: ளகரஈறு   எல்லாம்   அல்வழிக்கண்  இயல்பும் திரிபுமாக
உறழ்ந்து வருமென்று கூறுவர் ஆசிரியர்.
 

எ. டு:  முள்கடிது - முட்கடிது, சிறிது,  தீது,  பெரிது  எனவரும். புள்,
பொருள் முதலாயவற்றொடும் கூட்டிக் கண்டு கொள்க.
 

சூ. 399 :

ஆய்தம் நிலையலும் வரைநிலை யின்றே 

தகரம் வரூஉம் காலை யான
(104)
 

க-து :

ளகர ஈறு தகரம் வரும்வழி எய்தும் சிறப்புவிதி கூறுகின்றது.
  

பொருள் :  குற்றெழுத்தைச்   சார்ந்து   ஈரெழுத்தொரு   மொழியாக
நிற்கும் ளகர ஈறு  தகரம்  வருமிடத்து   ஆய்தப்  புள்ளியாகத்   திரிந்து
நிற்றலும் நீக்கும் நிலையின்று. குற்றெழுத்தைச் சார்ந்த ஈரெழுத்தொருமொழி
என்பது ஏற்புழிக் கோடல் என்னும் உத்தி.
 

எ. டு:  முள் + தீது = முஃடீது எனவரும். முஃடீமை என வேற்றுமைக்
கண்ணும் வரும். உம்மையால் முட்டீது-முட்டீமை எனவும் வரும்.
 

சூ. 400:

நெடியதன் இறுதி இயல்பா குநவும் 

வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் 

போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே 

(105)
 

க-து :

ஒருசார்  ளகர ஈற்றுச் சொற்களுக்குப் புறனடை வகையான் விதி
கூறுகின்றது.