நூன்மரபு310

வரலாறு:   ஞகர   நகர   ஈறுகள்  உரிஞின் குறை, பொருநின் குறை,
வெரிநின் குறை  என வேற்றுமைக்கண் இன்சாரியை பெறுதலும்; ணகர ஈறு
மண்ணப்பந்தம்,   எண்ணநோலை   எனவும் மண்ணுக்குள், விண்ணுக்குள்
எனவும்,  ஆணின்கால்,   மண்ணின்மேல்   எனவும்  முறையே அகரமும்,
உகரமும்  இன்னும்  ஆகிய சாரியை  பெறுதலும்; மகர ஈறு குளத்துக்கரை,
மருதத்துப்புறனே, மரத்தின்புறம் என அத்தும்  இன்னும்  ஆகிய சாரியை
பெறுதலும்;   னகர   ஈறு  நாயின் கால், வேயின் தலை என இன்சாரியை
பெறுதலும்; ரகர ஈறு அல்வழிக்கண் நீர்  குறைந்தது,  நீர் சுருங்கிற்று என
உறழாது  இயல்பாதலும்;  லகர  ஈறு  வேற்றுமைக்கண்  விழன்காடு  என
னகரமாதலும்;    ஆலங்கானம்,    புடோலங்காய்   என அம்முச்சாரியை
பெறுதலும்;  அழலத்துக்   கொண்டான்   என அத்துச்சாரியை பெறுதலும்;
அல்வழிக்கண்  அழுக்கற் போர்  என  றகரமாகத்   திரிதலும்;  நெல்லுப்
பெற்றேன்,  சொல்லுக்குத் தோற்றது, கல்லுப்பாறை என இருவழியும் உகரம்
பெறுதலும்; கல்லம்பாறை  என  அல்வழிக்கண்  அம்முப்பெறுதலும்; வகர
ஈற்றுள்  தெவ்  என்பது தெம்முனை என  மகரமாகத் திரிதலும்; ழகர ஈறு,
வேற்றுமைக்கண்   யாழின்கோடு   என இன்சாரியை பெறுதலும்; ஏழுநாள்,
பதினேழு  என எண்ணுப்பெயர் அல்வழிக்கண்  உகரம்  பெறுதலும்; ளகர
ஈறு   வேற்றுமைக்கண்   ஒருநாளைக்குழவி, ஒரு  திங்களைக் குழவி என
ஐகாரச் சாரியை பெறுதலும்; வாளின்புறம்  என  இன்சாரியை  பெறுதலும்;
தேளுக்குப்  பகை,  கொள்ளுக்கு விற்றான் என உகரம் பெறுதலும்; பிறவும்
அவ்வச் சூத்திரங்களுள் புறனடையாற் கொள்ளத்தகும் என்றவையும் பிறவும்
இவ்வாறு பொருந்தவருவனவெல்லாமும் ஆம் என அமைத்துக் கொள்க.
 

புள்ளிமயங்கியல் முற்றியது
 

9. குற்றியலுகரப் புணரியல்
 

தனித்து  வரல்  மரபினையுடைய  உயிரீறு  புள்ளியீறுகளின்  புணர்ச்சி
விதிகளைக் கூறிச் சார்ந்து வரல்மரபின எனப்பட்டவற்றுள் மொழிக்கு ஈறாக
நிற்பதற்குரியது  குற்றியலுகரம்   மட்டுமேயாதலின்; அஃது ஈறாக   நின்று
நாற்கணங்களொடும்   புணருமாறு  கூறுதலின்,   இவ்வியல்  குற்றியலுகரப்
புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று.