மொய்ம்பு எனவும் ஆர்ந்து, சூழ்ந்து எனவும் வரும். இவை மென்றொடர். எனவே சார்பு, உல்கு, வெய்து, போழ்து, தெள்கு என இடைத்தொடர் ஓரொற்றாயே வரும் என்பதாயிற்று. வகரம் வல்லொற்றொடு மயங்காமையின் இடைத்தொடர் மேற்கூறிய ஐந்துவகையாகவே வரும் என அறிக. |
சூ. 408 : | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் |
| எல்லா இறுதியும் உகரம் நிலையும் |
(3) |
க-து : | குற்றியலுகரம் நால்வகைச் சொற்கும் ஈறாகி இருவழியானும் புணரும் என்கின்றது. |
பொருள்: அல்வழிப் புணர்ச்சியைக் கூறுமிடத்தும், வேற்றுமைப் புணர்ச்சியைக் கூறுமிடத்தும் பெயரும் தொழிலுமாக அடங்கிவரும் எல்லாச் சொற்களினிறுதியும் குற்றியலுகரம் நிலைபெற்றுப் புணரும். நிலையும் என்றது நின்று புணரும் என்றவாறு. |
எ. டு: தேசு, முரசு, உல்கு, க ஃசு, கச்சு, நெஞ்சு என நிறுத்தி இனிது, இனிமை எனக்கூட்டி இருவழியும் பெயராக நின்று புணருமாறும், கூறென்றான், பருகென்றான், நோக்கென்றான், அஃகென்றான், நல்கென்றான், உண்டென்றான் எனத் தொழிற் சொல்லாக நின்று புணருமாறும் கண்டு கொள்க. ஏனைக் கணங்களையும் இவ்வாறே கொணர்ந்து கூட்டிக் கண்டு கொள்க. |
சாத்தா! கூறு, நோக்கு என முன்னிலை ஏவலாக வருதற்கண் கூறு, நோக்கு என்பவை குற்றுகரமாகா. ஆண்டு அவை முற்றுகரங்கள் என்பது தொகைமரபினுள் கூறப்பட்டது. |
இனி, இவற்றைத் தனிமொழியாகக் கூறுதற்கண் முற்றுகரமாயின் இதழ்குவித்தும் குற்றுகரமாயின் இதழ் குவியாதும் கூறிக் கொள்க. வரிவடிவின்கண் புள்ளியிட்டுக் குற்றியலுகரத்தை வேறுபடுத்திக் கண்டு கொள்க. வரிவடிவ அடையாளம் இன்றியமையாததென்பதை உணராமல் இடைக்காலத்தார் நெகிழவிட்டமையின் உரையாசிரியன்மாரும் ஆய்வாளரும் குழப்பத்திற்காளாயினர். ஒருசாரார் வரிவடிவைப் பிறைக்கோட்டினுள் எழுதிக்காட்டுவர். |
இனி, இந்நூற்பாவின் கருத்துப் புணரியலுள் ‘‘அறுநான் கீற்றொடு நெறிநின் றியலும்’’ (புண-1) என்னும் சூத்திரத்துள் குற்றியலுகரமும் சேர்ந்து எண்ணப்பெற்றமையின் “வேற்றுமை |