நூன்மரபு317

யாட்டுஞாற்சி, நிணம், மணி, வால் என   ஏனைக்கணங்கள்   இயல்பாயின.
முயிறு, குறடு முதலியவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.
 

இரட்டுதல் பெரும்பான்மையும், றகரமும்    டகரமுமாம்.   சிறுபான்மை
எருத்துக்கால்-வெருக்குக்கண் எனத் தகரமும்   ககரமுமாம்.    “தோற்றம்”
என்றதனான் களிற்றியானை,     கரட்டுக்கானம்,   வெளிற்றுப்பனை  என
இருபெயரொட்டு அல்வழிக்கண் இரட்டுதல் கொள்க.
 

சூ. 412 :

ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே 

அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகுதி  

(7)
 

க-து :
 

மேற்கூறிய இருவகை மொழிகட்கும் பிறிதொருவிதி கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய இருவகை மொழிகளுள்  இடையே  இன  ஒற்று
மிகாத  மொழிகளும்   உள.   அவ்வகை   மொழிகளிடத்து   வருமொழி
வல்லெழுத்து மிகுதல் இல்லை.
 

எ. டு: நாகுகால், செவி, தலை, புறம்   எனவும்;   வரகுகதிர்,   சினை,
தாள், பதர் எனவும் வரும்.
 

சூ. 413 :

இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் 

நடையா யியல என்மனார் புலவர் 

(8)
  

க-து :
 

இடைத்தொடர்,     ஆய்தத்    தொடர்கள்      இயல்பாகப்
புணருமென்கின்றது.
 

பொருள் : இடைத்தொடர்   ஆய்தத்   தொடர்க்   குற்றியலுகரங்கள்
வேற்றுமைக்கண்      வல்லெழுத்தொடு     புணருமிடத்து    மேற்கூறிய
அவ்வியல்பினவாம் எனக் கூறுவர்   புலவர்.    என்றது;     இயல்பாகப்
புணருமென்றவாறு.
 

எ. டு: தெள்குகால்,  சினை,  தலை,  புறம்  எனவும்  எஃகு,  கடுமை,
சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.
 

சூ. 414 :

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 

வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே 

மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் 

வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்  

(9)
 

க-து :

வன்றொடரும்   மென்றொடரும்   புணருமாறு   கூறுகின்றது.