க-து : | மரப்பெயர்களுள் சிலவற்றிற்கு எய்தியது ஒரு மருங்கு விலக்குகின்றது. |
பொருள் : மென்றொடர் மொழியுள் கிளையொற்றாகத் திரியுமென்றவற்றுள் அங்ஙனம் திரியாமல் அம்முச்சாரியையொடு வரும் மரப்பெயர்களும் உளவாம். |
எ. டு: குருந்தங்கோடு; புன்கங்காய், செதிள், தோல், பூ எனவரும். உம்மையான் வல்லெழுத்தாகத் திரிந்து சாரியை பெறுவனவே பெரும்பான்மை என்க. எ.டு : வேப்பங்காய், கடப்பங்கோடு எனவரும். இன்னும் அதனானே மரமல்லாத புல்லும் தெங்கங்காய், கருப்பஞ்சாறு எனவருதலும் கொள்க. |
சூ. 417 : | ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் |
| அம் இடை வரற்கும் உரியவை யுளவே |
| அம்மர பொழுகும் மொழிவயி னான |
(12) |
க-து : | ஒருசார் ஈரெழுத்து மொழியும் வன்றொடர்மொழியும் அம்முச்சாரியை பெறும் என்கின்றது. |
பொருள் : நெடிற்றொடர் மொழி, வன்றொடர் மொழிகளுள் அம்முச்சாரியை இடையே வருதற்கு உரியவையும் உள. அங்ஙனம் வருதல் அம்மரபினான் நடைபெறும் மொழிகளிடத்தேயாம். உம்மை எதிர்மறை. |
எ. டு: ஏறங்கோள், சூதம்போர் எனவும் வட்டம்போர் எனவும் வரும். நாகுகால், கொக்குக்கால் இவை போல்வன அம்முப்பெறாதன. “அம்மர பொழுகும் மொழிவயி னான” என்றதனான் சிறுபான்மை விளக்கத்துக் கொண்டான் என அத்துச்சாரியை பெறுதலும் கொள்க என்றார் உரையாசிரியர். |
சூ. 418 : | ஒற்றுநிலை திரியாது அக்கொடும் வரூஉம் |
| அக்கிளை மொழியும் உளவென மொழிப |
(13) |
க-து : | மென்றொடர்மொழி சிலவற்றிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. |