பொருள் :மூன்றீற்றுக் குற்றியலுகர எண்ணுப் பெயர்ச் சொற்கள பொருட்புணர்ச்சிக்கண் உருபுபுணர்ச்சிக்கு ஓதியாங்கு அன்சாரியை பெற்று நிற்கும். | எ. டு: ஆறன்காயம், நூறன்காயம், எட்டன்காயம், ஒன்றன்காயம், ஐந்தன்காயம் எனவரும். சுக்கு, தோரை, பயறு, ஞாண், நூல், மணி, வட்டு, அடை, ஆடை என ஏனை எழுத்தொடும் கூட்டிக் கொள்க. ஆறன்காயம் = ஆறனாற் கொண்ட காயம் என வேற்றுமைப் பொருள்பட விரிக்க. | சூ. 420 : | வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் | (15) |
க-து : | மென்றொடர்மொழியுள் இரண்டற்கு வேறு சாரியை ஓதுகின்றது. | பொருள் :வண்டு-பெண்டு என்னும் சொற்கள் இன்சாரியையொடு பொருந்திவரும். | எ. டு:வண்டின்கால், பெண்டின்கால் - சிறை, செவி, தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்களுள் ஏற்பன கூட்டிக் கொள்க. | சூ. 421 : | பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார் | (16) |
க-து : | பெண்டென்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. | பொருள்: மேற்கூறியவற்றுள் பெண்டென்னும் சொற்கு இன்சாரியையேயன்றி அன்சாரியை வரினும் நீக்கார் ஆசிரியர். | எ. டு: பெண்டன்கை, செவி, தலை, புறம் எனவரும். ஏனைக் கணங்களுள் ஒப்பன கூட்டிக் கொள்க. | சூ. 422 : | யாதென் இறுதியும் சுட்டு முதலாகிய | | ஆய்த இறுதியும் உருபியல் நிலையும் | (17) | க-து : | ஒருசார் வினாப் பெயர் சுட்டுப்பெயர்கட்காவதொருவிதி கூறுகின்றது. | பொருள் : யாது என்னும் நெடிற்றொடர் மொழியாகிய வினாப்பெயரிறுதியும், சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர்மொழியாகிய (சுட்டுப்) பெயர்களின் இறுதியும், உருபுபுணர்ச்சிக்கு ஓதிய இயல்பினவாய் நிலைபெறும். | அஃதாவது; இவை அன்சாரியை பெறும். ஆய்தம் தொடர்ந்த சுட்டுப்பெயரிறுதி சாரியை பெற்றபின் ஆய்தம்கெடும் என்றவாறு. |
|
|