எ. டு: யாதன்கோடு; அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு, செவி, தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்களொடும் ஒட்டிக்கொள்க. அஃது + அன் + கோடு = அதன்கோடு. சாரியை ஏற்றபின் ஆய்தம் கெட்டது. | சூ. 423 : | முன்னுயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி | | மன்னல் வேண்டும் அல்வழி யான | (18) | க-து : | ஆய்தத் தொடர்ச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் உயிர்முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள் :ஆய்தத்தொடர் மொழியாகிய சுட்டுப் பெயர்கள், அல்வழிக்கண் உயிர்முதன்மொழி வந்து புணருமிடத்துச் சாரியை வருங்கால் கெடுமென்ற ஆய்த எழுத்துக் கெடாது நிலைபெறல் வேண்டும். | எ. டு: அஃது, இஃது, உஃது என நிறுத்தி அணி, ஆடை, இலை, ஈயல், உரல், ஊர்தி, எழு, ஏனை, ஐயம், ஒழுக்கம், ஓங்கல், ஒளவியம் என்பவற்றைக் கூட்டி அஃதணி, அஃதாடை என முறையே வருமாறு கண்டு கொள்க. | சூ. 424 : | ஏனைமுன் வரினே தானிலை யின்றே | (19) |
க-து : | மேற்கூறிய சுட்டுப்பெயர்கள் ஏனைக்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. | பொருள் : ஆய்தத் தொடர்மொழிச் சுட்டுப்பெயர்கள் உயிர்க்கணமில்லாத ஏனைக்கணம் வந்துபுணரின் மன்னல் வேண்டுமென்ற ஆய்தப்புள்ளி நிலைத்தல் இன்று. | எ.டு :அஃது + கடிது = அதுகடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும். | சூ. 425 : | அல்லது கிளப்பின் எல்லா மொழியும் | | சொல்லிய பண்பின் இயற்கை யாகும் | (20) | க-து : | வன்றொடர் அல்லாத மொழிகள் அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது. | பொருள் :வன்றொடர் அல்லாத ஏனை ஐந்தீற்றுக் குற்றியலுகர மொழிகள் யாவும் அல்வழியாற் புணருமிடத்து முதனூலாசிரியராற் சொல்லப்பட்ட முறைமையானே இயல்பாகப் புணரும். |
|
|