நூன்மரபு38

xxxix
 

வரும்  முனைவர்  சிலம்பொலி  சு. செல்லப்பனார் அவர்கட்கு என் நன்றி
என்றும் உரியதாகும்.
 

எனது    நூல்களை     வெளியிடுவதற்காகும்    செலவுபற்றி   யான்
கவலாமைக்குக்     காரணமாக       இருக்கும்      என்      இளவல்
Dr. ச. இராசேந்திரனுக்கும்  (U.S.A)  அச்சிடுதற்கு ஆவன  புரிந்து  வரும் அருமை நண்பர்  நல்லாசிரியர்  அ. கிருட்டிணமூர்த்தி அவர்கட்கும்,  கால
நீட்டிப்பையோ வருவாய் முதலியவற்றையோ சிறிதும்  கருதாமல்  இதனைத் தமது சொந்த வெளியீடு போலவே  கருதிச்  சிறந்த  முறையில்  அச்சிட்டு உதவியுள்ள  பெருமதிப்பிற்குரிய அன்பர் ஜெமினி  அச்சகப் பொறுப்பாளர் பேராசிரியர்         பு.நா. இராமச்சந்திரனார்             அவர்கட்கும் நன்றிக்கடப்பாடுடையேன்.
 

தொல்காப்பியத்தைப் புரிந்து  கொள்ள வழிகாட்டிய  வணக்கத்திற்குரிய இளம்பூரணர்   முதலாய   உரையாசிரியப்   பெருமக்களின்  திருவடிகளை எண்ணி நன்றி செலுத்துகிறேன்.
 

இத்தொல்காப்பிய    ஆராய்ச்சிக்    காண்டிகையுரை    உருப்பெற -
அச்சேற-பல்வகையான்  துணைபுரிந்துள்ள   பெருமக்களையும்   அவர்தம்
உதவிகளையும் உரை வரலாற்றில் விரிவாக எழுதவுள்ளேனாதலின் அவருள்
புலவர் வி. அ. அரங்கசாமி,  பி. விருத்தாசலம்  எம்.  ஏ., ந. இராமநாதன் எம்.ஏ.,     முனைவர்     தமிழண்ணல்,    முனைவர்   நா.  பாலுசாமி,
க.   வெள்ளைவாரணனார்,      ச. இராமநாதன்   (க.த.ச)    முனைவர்
க.  பாலசுப்பிரமணியன்,       குன்றக்குடி    அடிகளார்,     முனைவர்
மு.  தமிழ்க்குடிமகன்,  ஒளவை  து. நடராசன், முனைவர் சோ. ந.கந்தசாமி,
முனைவர் செ. வை. சண்முகம், க. சிவகாமி, முனைவர் கோ. தெய்வநாயகம்,
முனைவர்   வே. காத்தையன்,     முனைவர்  அ. தட்சணாமூர்த்தி,  குரு.
கோவிந்தராசன், மா.ரா. அரசு, க. கலியபெருமாள், ம.ஏசுதாசன்,  முனைவர்
பெ.  மாதையன்,     முனைவர்     சித்திரபுத்திர   பிள்ளை,  முனைவர்
இரா.   இளையநம்பி,    முனைவர்   வி. ஐ.   சுப்பிரமணியம்   முதலிய பெமக்களை   நன்றியோடு   நினைக்கிறேன்.   இதனை   முட்டுப்பாடின்றி
முற்றுவித்த இறைவன் திருவடிகளைப் போற்றுகின்றேன் நன்றி.
 

ச. பாலசுந்தரம்.