இனி வியாகரணமென்பது வடமொழி வேதாங்கம் ஆறனுள் ஒன்றாய் வேதத்துட் பயிலும் சொற்களின் அமைப்பும் இயல்பும் அவற்றைப் பயிலும் முறையும்பற்றிக் கூறுவதாகும். எழுத்துப் பற்றிய இயல்புகளைச் ‘சிட்சை’ யென்னும் அங்கமும், யாப்புப் பற்றிய விதிமுறைகளை ‘நிருத்தம்’ என்னும் அங்கமும் பேசும். இடைக்காலத்துத் தோன்றிய வியாசர், யாக்ஞவல்கியர், யாஸ்கர், பாரத்துவாசர், பாணினி, காத்தியாயனர் போன்ற பேரறிஞர்கள் எழுத்து, சொல், யாப்பு ஆயவையடங்க நூல் செய்துள்ளனர். இம்முறையிலான பாணினி முனிவரின் அட்டாத்தியாயியை வியாகரணம் என்றும் வழங்குகின்றனர். பிற்காலத்தில் இலக்கணம் என்னும் பொருளில் இச்சொல் மிகுதியாக வழங்குகிறது. எனவே, உரையாளர்கள் இவற்றுள் எக்கருத்துப்பற்றிக் கூறினர் என்பது புலப்படவில்லை. |
கற்ப ஆரம்பத்தில் பிரமதேவர் தேவர்களுக்குச் சொன்ன பிரமநூலை இந்திரன் நூறாயிரம் கிரந்தங்களாற் சுருக்கிக் கூறினான். இவ் ஐந்திரநூலைப் பாணினி எண்ணாயிரங் கிரந்தங்களில் அடக்கினான் என ஹொய்-லி (Hoei-Li) என்னும் சீன அறிஞர் கூறியுள்ளார். இனித், தைத்திரீய ஆரண்யகத்தில் காணப்படும் ஒலிநூற் குறிப்புக்கள் சிலவும், சாந்தோக்கிய உபநிடதத்தில் வரும் குறியீடுகள் சிலவும், ஐதரேயப் பிராமணத்தில் உள்ளன சிலவும், ஐந்திர வழக்குகளே எனவும், |