பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துதற்கு உபகாரமுடைய பொதுவிலக்கண முணர்த்தி, நிறுத்த முறையானே இனிப் பெயர்ச் சொல் உணர்த்துகின்றார். மேற் கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப் படுவன உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறிணைக்குரியவாய் வருவனவும், இரண்டு திணைக்கு மொத்த வுரிமையவாய் வருவனவுமென மூன்று வேறுபாட்டனவாம் தோன்று நெற்றிக்கண் ; எ-று. (6)
|