எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மையில் சொல்லாயின் அவ்வும்மையில் சொல்லை அவ்வும்மைத் தொடர்க்குப் பின் சொல்லாது முன் சொல்லுக ; எ - று. எ - டு : சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் என வரும் . கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின், முற்கூறியதனை விலக்குவதுபோன்று பொருள் கொள்ளாமை கண்டு கொள்க. `அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான் கடல்போலுங் கல்வியவன்' என்பது மது. உம்மையடாதே தானே நிற்றலிற் செஞ்சொலென்றார். செஞ்சொலாயின் முற்படக் கிளக்க வெனவே, எஞ்சு பொருட் கிளவி உம்மையொடு வரிற் பிற்படக் கிளக்க வென்றவாறாம். (36)
|