2.வேற்றுமையியல்

வேற்றுமையின் வகை

தாமே யென்பது கட்டுரைச் சுவைபட நின்றது.

63விளிகொள் வதன் கண் விளியோ டெட்டே.

விளிகொள்வதன் கண்ணதாகிய விளியோடு தலைப்பெய்ய வேற்றுமை யெட்டாம்; எ-று.

வேற்றுமை யென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர்,

விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு
தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (சொல்-118)

எனபவாகலின் , விளிகொள்வ தென்றது விளிகொள்ளும் பெயரை , அதன்கண் விளியென்றதனால் , பெயரு மன்று பெயரின் வேறு மன்று . விளி வேற்றுமையாவது திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி யென்பதாம்.

`வேற்றுமை தாமே யேழென மொழிப' (சொல் - 62) எனப் பிறர் மதங்1கூறி இச் சூத்திரத்தால் தந்துணி புரைத்தார்.2

(2)


1.பிறர் மத மென்றது தொல்காப்பியர்க்கு முந்தின பிற தமிழிலக் கணிகளின் மதத்தை

2. இக் கருத்து 74 - வது நூற்பா உரையில் வலியுறுத்தப்படுதல் காண்க.