[விளிமரபு]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்79

79

உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீறுகள்

124.னரலள வென்னு மந்நான் கென்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.

உயர்திணைப் பெயருள் புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் வகுத்து உரைத்து
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணை மருங்கிற், புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் ன, ர, ல, ள என்னும் ஈற்றினை யுடைய அந்நான்கென்று சொல்லுவார் ஆசிரியர், எ - று.

உயர்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. ன, ர, ல, ள என்பன ஆகுபெயராய் அவ் வீற்றினை யுடைய பெயர்க்குப் பெயராயின. உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும்.

(10)

ஏனைப் புள்ளியீ றுகள் உயர்திணையில் விளி ஏலா எனல்

125.ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா.

ஐயமறுத்தலை நுதலிற்று.

இ - ள். உயர்திணைப் பொருட்கண் மேற் சொல்லப்பட்ட நான்கீற்றுப் பெயரும் ஒழிய, ஏனையீற்றுப் பெயர்கள் விளியேலா, எ - று.

எ - டு. அவை:--யான், யாம், நாம், எல்லோரும், எல்லீரும், எல்லாம், தாம் என்பன.

(11)

னகர ஈறு விளியேற்குமாறு

126.அவற்றுள்,
அன்னெ னிறுதி ஆவா கும்மே.

நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ - று.

ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை.

எ - டு. சோழன், சோழா; வெற்பன், வெற்பா; சாத்தன், சாத்தா எனவரும்.

(12)

னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல்

127.அண்மைச் சொல்லிற் ககர மாகும்.

எய்தியது விலக்கி மேலதற்கோர் புறநடை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். அன் என்னுமீறு அண்மைக்கண் அகரமாகி விளியேற்கும், எ - று.